தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு பொன்விழா கொண்டாட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு
தனி திராவிட நாடு கேட்ட கட்சி திமுக, இதனை குறிவைத்து மொழிவாரி மாநிலமாக தென்னகத்தை குறிப்பாக சென்னை மாகாணத்த்தை குதறிபோட்டது டெல்லி
காஷ்மீர் போர், சீனபோர் என இந்தியா கடும் இறுக்கத்தில் இருந்த நேரம், பிரிவினைவாதிகளை களையெடுப்போம் என மிகபெரும் நடவடிக்கைக்கு டெல்லி தயாரானது, இதனால் திமுக “தனிநாட்டு கோரிக்கையினை கைவிடுகின்றோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” சொல்லி தனிநாடு கோரிக்கையினை தள்ளிபோட்டது
இல்லையேல் அன்றே திமுக தடைசெய்யபட்டிருக்கும்.
மற்ற மாநிலம் எல்லாம் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என மாறிய பின்னும் தமிழகம் சென்னை மாகாணம் என தொடர்ந்தது, சங்கரலிங்கனார் என்பவர் தமிழகம் என மாற்றகோரி உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை அவர் உண்ணாவிரதத்திலே இறந்தார்
அவரை சாக விட்டிருக்க கூடாது ஆனால் விட்டார்கள், ஏன் என்றால் காங்கிரஸ் அப்படித்தான் சில விஷயங்களில் அது தமிழர் உணர்வை புரிந்துகொள்ளாது
பின்னர் இந்தி எதிர்ப்பு பெரும் போராட்டமாக வெடிக்க சங்கரலிங்கனாரின் சாவே காரணம்
1967ல் ஆட்சியினை பிடித்தது திமுக, மிக குறுகிய காலமே இருந்தாலும் அண்ணாவின் ஆட்சி மகத்தானது. அந்த மனிதருக்க்கு மட்டும் ஆயுள் இருந்திருப்பின் தமிழகம் இப்படி சீரழிந்திருக்காது, திராவிட ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டு அந்த ஆட்சி
அப்பொழுதுதான் தமிழுக்கு பல விஷயங்கள் நடந்தன, தமிழக அடையாளங்கள் புத்துயிர் பெற்றன, அப்படியே சென்னை மாகாணமும் தமிழ்நாடு என பெயர்மாற்றம் பெற்றது
1967 ஜனவரி 14ல் அது தமிழ்நாடு ஆனது, இன்றுவரை நாடு என்ற பெயரில் இருக்கும் மாநிலம் இதுவே
ஆக திமுக ஒன்றும் திராவிட அரசியல் செய்யவில்லை, அப்படி சொல்பவன் எவனாக இருந்தாலும் பைத்தியகார மருத்துவமனைக்கு அனுப்புதல் நன்று. மொழிவாரி மாநிலம் பிரிந்தபின்பு இங்கு தமிழ் தேசியத்தைத்தான் திமுக செய்தது
இப்பொழுது அந்த நிகழ்வின் பொன்விழாவினை கொண்டாட போகின்றார்களாம்
கலைஞரிடம் கேட்டார்கள் உங்கள் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம் எது?
எத்தனையோ நிகழ்வுகளை. முதல் குடும்ப நிகழ்வு, கட்சி நிகழ்வுகள் முதல் பல உருக்கமான, மகிழ்வான , சந்திப்பான பிரிவான நிகழ்வுகளை கண்ட கலைஞர் சொன்னார்
“சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யபட்டு சட்ட சபையில் அண்ணா மும்முறை முழங்கியபொழுது , நாங்கள் எல்லாம் பின்னிருந்து தமிழ்நாடு வாழ்க என சொன்ன அந்த தருணம் என் வாழ்வில் மறக்க முடியாதது” என சொல்லி கண்களை துடைத்து கொண்டார்
இந்நிகழ்வு நடந்தபொழுது ராமசந்திரன் வேட்டைக்காரன் படத்தில் நடித்துகொண்டிருந்தான், ஜெயலலிதா அறிமுக நடிகை
இந்த சசிகலா நாட்டுமருந்து விற்றுகொண்டிருந்தார், பழனிச்சாமி எங்கோ களை வெட்டிகொண்டிருந்தார்
இன்று அந்த பழனிச்சாமி விழா எடுக்கின்றாராம், எடுக்கட்டும் காலம் அவரை அமர்த்தியிருக்கின்றது
ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள கூடிய, கலந்து கொண்டே ஆக வேண்டிய முழு தகுதியும் இன்று கோபாலபுரத்தில் முடங்கி கிடக்கும் அந்த மனிதனுக்கு இருக்கின்றது
அம்மனிதன் இதற்காக உழைத்தது கொஞ்சமல்ல
அரசியலை தாண்டி, தமிழ்நாடு என பெயர் பெற அந்த மனிதன் உழைத்தான் என்பதையும், அதே சட்டசபையில் அண்ணாவோடு சேர்ந்து மனநிறைந்த மகிழ்வோடு கண்ணோரம் ஆனந்த நீர் கசிய தமிழ்நாடு என கத்தினான் என்பதையும் நினைத்துபாருங்கள்
அந்த மனிதனை அழைக்காமல் அந்த விழாவிற்கு அர்த்தமில்லை, ஒரு வேளை அழைக்காவிட்டாலும் அந்த மனிதனுக்கு அவமானமில்லை
இன்று பொன்விழா கொண்டாட அன்று முதல் அடி அவனே எடுத்துவைத்தான் என்பதை மறுக்கமுடியுமா? வரலாற்றை மாற்றத்தான் முடியுமா?
அவரின்றி இவ்விழா நடக்குமானால் உலகம் உங்களை பார்த்து நிச்சயம் சிரிக்கும், பழிக்கும்
தயவு செய்து அந்த மனிதனை அழையுங்கள், அதில் அவருக்கு அல்ல, உங்களுக்கே மிக்க பெருமை.