ஜெயலலிதா: மனமும் மாயையும் – வாஸந்தி எழுதிய புத்தகம்
இந்த புத்தகத்தை ஜெயா இருக்கும்பொழுது வாஸந்தி எழுதி நீதிமன்றம் சென்று தடை செய்தார் ஜெயா
ஜெயா இல்லா நிலையில் புத்தகம் வெளிவந்திருக்கின்றது, ஜெயாவே தடுத்தார் என்றால் நிச்சயம் அது அவரின் இமேஜினை பாதிக்கும் புத்தகமாக இருக்க முடியும்
இப்பொழுது புத்தகம் வந்தாயிற்று, ஜெயாவின் விசுவாசிகள் யாரும் குதிக்கவில்லை, அம்மா தடுத்த புத்தகம் எப்படி வரலாம் என பொங்கவுமில்லை
இவ்வளவுதான் இவர்களின் ஜெயா பாசம்
ஆக என்ன தெரிகின்றது, ஜெயா விசுவாசிகள் காற்று வீச கூட புத்தகம் புரட்டாதவர்கள், வாசிப்பு பழக்கம் அறவே இல்லாதவர்கள் என்பது புரிகின்றது
தனக்காக பேச ஒருவரை கூடவா ஜெயா உருவாக்காமல் சென்றுவிட்டார், பரிதாபத்திற்குரியவர் அந்த அம்மணி.
இதில் தமாஷ் என்ன தெரியுமா? புத்தக கண்காட்சியினை தொடக்கி வைத்தவர் அமைச்சர் செங்கோட்டையன்
அவர் இப்புத்தகத்தை கடந்து சென்றிருக்கின்றார்