நீதிதுறை மீது பகிரங்க கேள்விகள்

67 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையா நீதிதுறை மீது பகிரங்க கேள்விகள் எழுப்பபடுகின்றன‌

மற்றவர்கள் எழுப்பினால் நீதிமன்ற அவதிப்பு என சாத்திவிடுவார்கள், இப்பொழுது சொல்லி இருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் அதிருப்தியினை சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது எனவும் சொல்லியாயிற்று

இதிலிருந்து என்ன தெரிகின்றது?

இந்த நீதிபகள் கடமையில் ஏதோ சக்தி குறுக்கிடுகின்றது, உச்ச நீதிமன்றத்தையே ஒரு சக்தி படாதபாடு படுத்துகின்றது என்பது விளங்குகின்றது

உச்ச நீதிமன்ற நிலையே இப்படி இருந்தால் மற்ற நீதிமன்றங்கள் நிலை எப்படி இருக்கும்? என்ற அதிர்ச்சி குரல்கள் எழும்புகின்றன‌

நீதிபதிகளே நீதிஅமைப்பு மீது வீசியிருக்கும் குற்றசாட்டால் அதிர்ந்து நிற்கின்றது இந்தியா, இது சாதாரணமாக கடந்து போக கூடிய விஷயம் அல்ல, மிக பெரும் இக்கட்டான சிக்கல்

இத்தேசது ஜனநாயக தூண்களில் ஒன்று நீதித்துறை, லஞ்சம் ஊழல் அரசியல் என எல்லாமும் அரிக்கபட்ட இந்தியாவில் ஓரளவு நம்பக தன்மை கொண்டிருப்பது நீதிதுறையும், ராணுவமுமே

இந்தியாவின் இதயமும் மூளையும் இவைகள்தான்

அந்த நீதிதுறையின் மீது அதன் உச்ச பீடங்களே கை நீட்டி குற்றம் சுமத்தும் நிலையில், வெலவெலத்து நிற்கின்றது தேசம்

இனி பெரும் சிக்கல்கள் உருவெடுக்கலாம்

இதில் ஒரே ஒரு தரப்புக்கு மட்டும் ஆறுதல், அது மன்னார்குடி ஆதரவு தரப்பு

பார்த்தீர்களா? இப்படிபட்ட நீதிமன்றத்தில் எங்கள் நியாயம் எடுபடுமா? இல்லை இல்லவே இல்லை. அநியாயமாக தண்டிக்கபட்டார் சின்னம்மா என கிளம்புவார்கள் பாருங்கள்