தன் 100ம் செயற்கை கோளினை வானில் நிறுத்தியிருக்கின்றது இந்தியா

ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும் இத்தேசம் பல காரியங்களில் சாதனை படைத்தே வருகின்றது

ஆம், இன்றோடு தன் 100ம் செயற்கை கோளினை வானில் நிறுத்தியிருக்கின்றது இந்தியா

எத்தனை தடங்கல்கள்? எத்தனை போராட்டங்கள், இவை எல்லாம் தாண்டி நிற்கின்றது இந்தியா

ராக்கெட் என்பது ஹிட்லரின் கண்டுபிடிப்பு சந்தேகமில்லை, ஆனால் அவனின் விஞ்ஞானிகளை கொண்டு சென்ற அமெரிக்காவும் ரஷ்யாவும் சிக்கலின்றி வெற்றி கொடி நாட்டின‌

அவைகளால் அவைகளின் துணை நாடுகளுக்கு எல்லாம் நுட்பம் கிடைத்தது, இந்தியா அப்படி அல்ல‌

1970களில் தட்டுதடுமாறி களத்திற்கு வந்தது, முதல் ராக்கெட் சோதனை பாகங்களை சைக்கிளில் எல்லாம் சுமந்தோம்

சதீஷ்தவானும் அப்துல் கலாமும் சந்தித்த அவமானமும் தோல்வியும் கொஞ்சமல்ல, அந்த தொல்விகளை எல்லாம் பின்பு வெற்றியாக மாற்றினார்கள்

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினோம், முதலில் இந்திய செயற்கை கோள்கள் கயானாவில் இருந்து ஏவபட்டன, பின் நாமே ஏவினோம்

அதன்பின் எடை கூடிய செயற்கைகோள்களை ஏவ நுட்பமின்றி தவித்தோம், கிரையோஜனிக் நுட்பம் கிடைக்கவில்லை ஆயினும் போராடி கண்டறிந்தோம்

ஏன் இவ்வளவு சிரமபட வேண்டும்?

இந்த உலகம் செயற்கை கோள் உலகம், இந்த உலகத்தை அதுதான் இயக்குகின்றது, இணையம் போன் என எல்லாமே அதனை பொறுத்தது , இவைகள் இல்லா வாழ்வு இனி சாத்தியமில்லை , மானிட குலம் அவைகளின் கையில் சிக்கி ஆயிற்று

செயற்கை கோளும் ராக்கெட் அறிவும் இல்லா ராணுவம் இந்த உலகில் அவ்வளவுதான், இப்பலம் இருப்பதால்தான் ஓரளவு பாதுகாப்பாக இருக்கின்றது இந்தியா

வடகொரியா அணுகுண்டை செய்தாலும் அதனிடம் செயற்கை கோள் பலமில்லை. அது மட்டும் இருந்துவிட்டால் இந்நேரம் யுத்தம் வெடித்திருக்கும், செயற்கை கோளை ஏவும் நுட்பம் அவர்களிடம் இல்லை, அதனால் திட்டமிட்ட ஏவுகனைகளை செலுத்தமுடியுமா என்பது சந்தேகமே

முதலில் செயற்கை கோளை விட்டுவிட்டு அதன்பின் அணுகுண்டு செய்திருக்க்க வேண்டும் என இப்பொழுது வருந்துகின்றது வடகொரியா

இப்படியாக செயற்கை கோள்கள் இன்றைய உலகின் மகா முக்கிய அங்கம்

1970க்கு பின் களத்திற்கு வந்த இந்தியா இன்றோடு 100 செயற்கை கோள்களை ஏவி சாதனை படைத்திருக்கின்றது

அதில் அப்துல்கலாம் முதல் இன்றைய சிவன் பிள்ளை வரை ஏகபட்ட தமிழர்களின் பங்களிப்பும் உண்டு, அதனை நினைத்து பெருமைபடலாம்

வான்வெளியிலும் நமது தேசிய கொடியின் அடையாளத்தோடு செயற்கைகோள்கள் சுற்றுகின்றன, அதனையும் ஆள்கின்றோம்

மிகபெரும் வெற்றியினை பெற்றுகொடுத்திருக்கும் அத்தனை விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள், இத்தேசம் இன்னும் மாபெரும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துவோம்

வந்தே மாதரம்…