ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் : குருமூர்த்தி
ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் : குருமூர்த்தி
ரஜினியின் வோட்டு வங்கி இன்னும் தெரியாது, ஆனால் சர்வ நிச்சயமாக 40% எல்லாம் இருக்கமுடியாது, அதற்கும் மிக குறைவுதான், அவர் தேர்தலை சந்தித்தால்தான் உண்மை தெரியும்
பாஜக பற்றி உலகிற்கே தெரியும், வேட்பாளர் கூட கிடைக்காத கட்சி அது, கிடைத்தவருக்கு தேர்தல் கமிஷன் அபராதம் செலுத்தாமல் விட்டதே பெரிய விஷயம், டெப்பாசிட்டை மட்டும் பிடுங்கிகொண்டார்கள்
இதில் ரஜினி பாஜகவினை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை குருமூர்த்தி இப்படி வைக்கின்றார், அதுதான் உண்மை
இந்த பாஜக ஏன் தமிழகத்தில் வீணாகபோகின்றது என்றால், வடக்கத்திய தன்மையினை இங்கே புகுத்த முற்படுகின்றது. இந்துக்களுக்கு தாங்கள்தான் ஏக போக உரிமையாளர் என்று இந்த எச்.ராசா இன்னும் சில அழிச்சாட்டியங்கள் கிளம்புவதை தமிழகத்தார் ஏற்றுகொள்ளமாட்டார்கள்
பொதுவில் இந்துமதம் சாந்தமானது. அதனை பின்பற்ற எந்த கட்டுபாடோ, இறுக்கமோ தேவையே இல்லை
பல மணங்கள் புரியவும், எதையும் உண்ணவும் அது தடை செய்யவில்லை. அவதாரங்களாக வந்து இந்து தெய்வங்களே அப்படி வாழ்திருக்கின்றன
அந்த மதத்தின் சிறப்பே அதில் கடுமையான நிர்பந்த கட்டுபாடுகள் இல்லை என்பது, மனமார சாந்தமாக வழிபடுவதே அதன் ஸ்பெஷலிட்டி
அதனை வலுகட்டாயமாக பின்பற்ற வேண்டிய மதமாக, ஒரு பயங்கரவாத மதமாக, மசூதிக்க்கும் தேவாலயத்திற்கும் ஆபத்தான மதமான பிம்பம் போல பதியவைப்பது சரியல்ல
நல்ல இந்துக்களாக, உண்மையான இந்துகொள்கையுடன் இருந்தால் நிச்சயம் அது வளரும் அதற்கு ரஜினியும் தேவை இல்லை , கமலஹாசனும் தேவை இல்லை
இந்துமதத்தை அதன் இயல்பிலே விடுங்கள், தானாக வளரும்.
மாறாக பார்ப்பண அதிகாரம், மனுநீதி, வலுகட்டாயமான காவி போன்றவற்றுடன் நாங்கள்தான் இந்துமதத்தின் ஸ்பெஷல் ஏஜென்ட் என சொல்லிகொண்டிருந்தால் ரஜினி என்ன? சாட்சாத் அந்த பகவானே வந்தாலும் தமிழகத்தில் பாஜக வளராது
இவர்கள் கட்சியினை வளர்க்காவிட்டால் கூட சிக்கலே இல்லை மாறாக கலவரத்தை உண்டாக்காமல் இருந்தாலே போதும்
ரஜினி எனும் ஆட்டை தேடி கத்தியோடு அலைகின்றார்கள், ரஜினிதரப்பு எச்சரிக்கையாய் இருப்பது நல்லது
இல்லாவிட்டால் “இங்கு யாகம் நடக்கின்றது, பாஜக வளர யாகம் நடக்கின்றது, அதில் எரியபோகும் விறகு நீர்” என ரஜினியினை உள்ளே தள்ளும்பொழுது அவருக்கு புரியும்.