பொங்கல் மதங்களை தாண்டியது

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கலை கொண்டாடுவது ஏதோ ஆச்சரியம் போல சிலர் பேசிகொண்டிருக்கின்றார்கள்

இதில் என்ன ஆச்சரியம்?

கத்தோலிக்கம் உலகம் முழுக்க அந்தந்த மக்கள் தங்கள் கலாச்சார அடிப்படையில் கிறிஸ்துவத்தை பின்பற்ற அனுமதிக்கின்றது

கோவிலில் கொடிமரம் வைத்தல், தேர் இழுத்தல், முளப்பாரி, தவில் , நாதஸ்வரம், சந்தணம், மாலை சாற்றுதல் என எல்லா தமிழர் கலாச்சாரத்தில் இணைந்துதான் இங்கு அது நிலைத்திருக்கின்றது

ஆக அந்த ஆலயங்களில் பொங்கல் விழா நடப்பது ஆச்சரியமே அல்ல, நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்

பொங்கல் மதங்களை தாண்டியது

கத்தோலிக்கம் இவைகளை ஏற்றுகொள்ளும், பைபிளை கடவுளுக்கும் மேல் பலபடி தூக்கி பிடிக்கும் சில கும்பல்கள் இதனை ஏற்றுகொள்ளாது

அவர்கள் பொங்கல் கொண்டாடினால்தான் ஆச்சரியம்

அவர்களில் பல வகை உண்டு, சிலது கிறிஸ்மஸ் கொண்டாடும், ஈஸ்டர் கொண்டாடும் பைபிளில் கொண்டாட சொல்லி தேதி கொடுத்திருக்கின்றார்களா என்றால் ஹிஹிஹி வேற எப்படி புதுசட்டை போடுவது என சொல்லி சென்றுவிடும்

இன்னொரு கோஷ்டி உண்டு, அது ஆபத்தானது

பைபிளில் சொல்லபடவில்லை என ஒரு பண்டிகையும் கொண்டாடாது, அடேய் பழைய ஏற்பாட்டு பாஸ்கா கொண்டாடு என்றாலும் கொண்டாடாது. கம்மென்று இருக்கும், ஒரு மாதிரி சைக்க்கோ வகையறா

ஆனால் வருமானத்தில் பத்தில் ஒருபங்கு காணிக்கை வாங்கிவிட வேண்டும் என்பதில் மட்டும் பழைய ஏற்பாட்டினை பிடித்து தொங்கி வசூலிக்கும்

இப்படியாக கிறிஸ்தவரில் பலவகை … ஒவ்வொன்றும் ஒரு வகை…..