இறந்தவரை பழிப்பது அறிவுடமை ஆகாது
ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனை பற்றி பேச கூடாது என்பது தமிழர் மரபு, அதுவும் அவன் இறந்த அன்று அவன் இறுதிசடங்கு நடக்கும்பொழுது பழிப்பது எல்லாம் மானிடர் செய்யும் விஷயம் அல்ல
கலைஞரை அவர் சில இடங்களில் கண்டித்திருக்கலாம், கலைஞர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆயினும் அதனை சொல்ல இது நேரம் இல்லை
கலைஞர் நடமாடிகொண்டிருந்தால் ஞாநி உடலுக்கு விழுந்த முதல் மாலை கலைஞரிடம் இருந்துதான் வந்திருக்கும் என்பதை மறக்காதீர்கள்
தமிழக சமூக அவலத்தை, அரசியலை சாடி எழுதிய ஒரு சிந்தனை மிக்க எழுத்தாளன் இறந்திருக்கின்றான், அவனுக்காக அழுங்கள்.
அழாவிட்டாலும் அமைதி காத்திருங்கள்
மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, எதிர் முகாமில் இருப்போருக்கும் அறிவு உண்டு என்பதை மறக்க வேண்டாம்
சில திமுகவினர் செய்யும் அழிச்சாட்டியம் அதிகம்.
அன்பர்களே சாவு எல்லோருக்கும் பொதுவானது, அதில் இன்னொருவன் செத்திருக்கும் நேரம் கண்டதை எழுதுவதெல்லாம் அறிவுடமை ஆகாது