லுத்தரை தலைவனாக கொண்டு போராட பழகுங்கள்
இந்திய தலித் போராளி, மொழி போராளி, இன்னும் ஏகபட்ட போராளிகள் எல்லாம் நினைவில் கொள்ளவேண்டியது இந்த மார்ட்டின் லுத்தர் என்பவரைத்தான்
இங்கு சாதிக்கொரு நாடு, உட்சாதிக்கொரு நாடு, மதத்திற்கொரு நாடு, மொத்த தமிழக பிராமணரையும் கடலில் போட்டுவிட்டு திராவிட நாடு, மொத்த தெலுங்கரையும் விரட்டிவிட்டு சுத்த தமிழ்நாடு எல்லாம் சாத்தியமில்லை
உரிமைகளை கோரலாம், போராடலாம் பொறுமை மகா முக்கியம்
அப்படி இருந்தால் லுத்தரின் போராட்டத்திற்கு பின்னொரு நாளில் ஒபாமா வந்தது போல், தலித் பிரதமராகலாம், தமிழன் பிரதமராகலாம்
ஒற்றுமையே பலம்
அமெரிக்க கருப்பர்கள் லுத்தர் தனிநாடு கோரவில்லை மாறாக ஒன்றாக உழைத்து தேசத்தை வலுபடுத்தினார்கள், நாடு வலுவாக இன்னும் இருக்கின்றது
இந்தியாவினையும் அப்படி உருவாக்க பாருங்கள், மாறாக சுயலாபத்துக்காக பிரிவினைபேசினால் இத்தேசமும் பலமிழக்கும், நீங்களும் ஒழிந்து போவீர்கள் எல்லாம் நாசமாகும்
இனியாவது லுத்தரை தலைவனாக கொண்டு போராட பழகுங்கள், அப்படி வழி தெரியாவிட்டால் அமைதியாக இருங்கள்
உங்கள் அழிச்சாட்டிய போராட்டத்தை விட உங்கள் அமைதி இந்திய சமூகத்திற்கு நல்லது
அங்கிள் சைமன், இதோ லுத்தரும் கையினை முறுக்கி கொண்டு பேசுகின்றார், ஆனால் பாருங்கள் எவ்வளவு நல்ல தலைவர்
இவரிடமிருந்து நீர் ஏன் பாடம் படிக்க கூடாது? கொஞ்சமேனும் அறிவிருந்தால் …