ஸ்டாலினின் கோபம் நிச்சயம் பொன்னார் மீது இருக்க முடியாது

Image may contain: 8 people, people smiling, text

ஸ்டாலின் நாடாரை பற்றி அப்படி சொன்னார் என சர்ச்சை பின் சொல்லவில்லை என சர்ச்சை

ஸ்டாலினுக்காக கொந்தளிக்க தொடங்கிய நாடார் சங்கங்கள் “இல்லப்பா அவர் அப்படி சொல்லவில்லை வாளை உறையில் போடுங்க‌ப்பா …” என சொல்லிவிட்டு அடங்குகின்றன‌

உண்மையில் அப்படி ஸ்டாலின் நாடார்களை இழிவுபடுத்தி ஏதும் சொன்னாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை

ஸ்டாலினின் கோபம் நிச்சயம் பொன்னார் மீது இருக்க முடியாது, வேறு எங்கோ இருக்கலாம்.

அதே நேரம் கனிமொழிக்கு நாடார் சங்கங்களிடம் இருக்கும் வரவேற்பும், நாடார் ஊடகங்களிடம் இருக்கும் வரவேற்பும் கவனிக்கதக்கவை

அதனை மனிதர் பார்த்திருக்கலாம், சற்று கோபபட்டிருக்கலாம்

அதில் “இந்த நாடார்களே இப்படித்தான் குத்தணும்.. நாடாரை குத்தணும்.. குத்துங்க எசமான் குத்துங்க” என்ற வசனத்தில் பொன்னார் மேலும் சாடியிருக்கலாம்

உண்மையில் இப்போதைக்கு அடிதாங்கி, இடிதாங்கி, வசைதாங்கி யாரென்றால் நிச்சயம் பொன்னார் தான்.

ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், ஸ்டாலின் நாடார்களை சொன்னதாக பொங்கிய சங்கம், எச்.ராசா நாடாரை பற்றி ஏதோ சொன்னதாக வந்த செய்திக்காக பொங்கவில்லை அல்லவா?

ஏன்?

நாடார் சங்க சொத்துக்களுக்கும், நாடார் வியாபாரிகளின் கணக்கு வழக்குகளுக்கும் எல்லை இல்லை. ஆட்சியில் இருக்கும் அரசு நினைத்தால் நொடியில் வேட்டியினை உருவிவிட்டு மறுபடியும் பலரை மரமேற வைத்துவிடும்

அது இவர்களுக்கு தெரியாதா? அதனால் ஸ்டாலினை சாடுவார்களே அன்றி பாஜக பக்கம் செல்லவே மாட்டார்கள்

“ஒவ்வொரு பைசாவா எண்ணி சேர்த்த சொத்துல.. ஆட்சியில் இருப்பவனை பகைக்க கூடாதுல, பகைச்சா சொத்து போயிரும்ல..ஆட்சிக்கு யார் எதிரியோ அவனை விட கூடாதுல .. இதுதாம்ல வியாபார தந்திரம்.. புரியாதால….”