தேசிய ஜிஎஸ்டி ஆணையாளர், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது

தேசிய ஜிஎஸ்டி ஆணையாளர் லஞ்ச வழக்கில் சிபிஐயினால் கைது செய்யபட்டார், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது

இவை எல்லாம் மிக உயர் பதவியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கி சிக்கிய செய்திகள், சாதாரண பதவி பற்றி சொல்ல வேண்டியதில்லை

ஜிஎஸ்டி ஆணையாளர் லஞ்சம் வாங்கி சிக்கியது சாதாரணம் அல்ல, இது நிதித்துறைக்கு கீழ் வரும் இலகா

ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி பட்ஜெட் தொடரில் என்ன சொன்னாரென்றால் நாட்டை ஊழலில் இருந்து விடுவித்ததாக பெருமையாக வாசித்துகொண்டிருந்தார்

எப்படிபட்ட பகிரங்க பொய் அது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

இங்கே இப்படி எல்லாம் பெரும் ஊழல் நடக்க, அவர் எந்த நாட்டை விடுவித்தார்? அநேகமாக இலங்கையாக இருக்கலாம் அங்குதான் ராஜபக்சே குடும்பம் களி திங்க தயாராகின்றது

ராஜபக்சே என்றால் மன்னர் விசுவாச பரம்பரை அதாவது மன்னர்குடிதாங்கி என்ற பொருளில் வரும், என்னவோ மன்னார்குடி குடும்பங்களுக்கே இப்பொழுது நேரம் சுத்தமாக சரி இல்லை

இந்த பல்கலைகழக துணைவேந்தர் சிக்கியதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். காரணம் எல்லா பல்கலைகழகங்களுக்கும் ஆளுநர்தான் வேந்தர்

தமிழக அரசின் திட்டங்களை பற்றி ஊரெல்லாம் சுற்றி பார்க்கும் அவர், கழிவறை குளியலறை தரத்தை எல்லாம் சோதிக்கும் அவர், தன் கட்டுபாட்டில் இருக்கும் பல்கலைகழகங்களையும் அதன் ஊழல்களையும் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் ஆச்சரியம்

நிச்சயம் தமிழக கட்சிகள் பொங்க வேண்டிய நேரமிது, வேந்தரா? வெளிவேடகாரரா? என போட்டு வறுக்க வேண்டிய நேரமிது

ஆனால் ஒரு சத்தமுமில்லை, ஒரு பரபரப்புமில்லை ஏன் என்றால் அப்படித்தான். தமிழக அரசியலில் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என யாருக்குமே தெரியவில்லை எல்லாம் மல்லாக்க படுத்து தூங்கியாயிற்று

ஏன் கவர்ணர் கண்டுகொள்ளவில்லை , அதுவும் மோடியின் நல்லாட்சி என அதீத விளம்பரம் கொடுக்கபடும் நாட்களில் இந்த மாபெரும் ஊழலில் ஏன் ஆளுநர் அமைதிகாக்கின்றார்

ஒருவேளை மோடி ஆட்சி லஞ்சம் ஊழல் இப்படி மகா மோசம் என அவரே ஒப்புகொள்கின்றாரோ?