தலைவி 30 நிமிடம் கூடுதலாக பேசியதற்கு வழக்காம்…
நெல்லை முக்கூடலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் 3 மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் வரவில்லையாம்
அப்படி சில நபர்கள் உண்டா என்பது வேறுவிஷயம்.
ஆனால் கூட்டம் அள்ளியிருக்கின்றது. தங்க தலைவியின் பேச்சை கேட்க பெரும் கூட்டம் ஆரவாரமாக கூடியிருக்கின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன
1980களில் ஜெயலலிதாவிற்கு இருந்த அதே வரவேற்பு தலைவிக்கு இருக்கின்றது என்பதை இப்பொழுது எல்லோரும் ஒப்புகொள்ள தொடங்கியாயிற்று, அன்று ஜெயாவிற்கு இருந்த அதே தைரியம் இப்பொழுது குஷ்பு ஒருவருக்கே இருக்கின்றது என தமிழகமும் நோக்க தொடங்கிவிட்டது
இது அரசுக்கு பொறுக்குமா? தன் பழிவாங்கும் வேலையினை காட்டிவிட்டது
அதாவது பாஜக அரசின் பட்ஜெட்டையும் அதன் பிரயோசனமில்லா விஷயங்களையும் தலைவி மக்களுக்கு விளக்கி சொல்ல சொல்ல கூட்டம் ஆவலாய் கேட்டிருக்க்கின்றது
அதில் தலைவி 10.30 வரை பேசியிருக்கின்றார், இதனை டிவியில் பார்த்துகொண்டிருந்த அந்த வராத மாவட்ட செயலாளர்கள் கோர்த்துவிட, மக்கள் கூடும் கூட்டத்தை கண்ட அரசும் ஒரு முடிவுக்கு வந்து அவர் மீது வழக்கு பதிந்தது என்கின்றார்கள்
விஷயம் பரபரப்பாகின்றது
எப்படியாவது குஷ்புவினை விரட்ட வேண்டும் என விவேகமின்றி சிந்தித்த உள்ளூர் காங்கிரசார் தங்களுக்கே வேட்டு வைத்தாயிற்று, இனி தலைவி அடிக்கடி அப்பக்கம் வரவேண்டும், மக்கள் ஓடிவந்து ஆதரளிப்பார்கள்
தங்களுடன் தங்கள் அபிமான தலைவி பேசியதற்கா வழக்கு என முக்கூடல் பக்கம் மக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
அப்பக்கம் தங்க தலைவிக்கு மகத்தான ஆதரவு பெருகுகின்றது, இனி அப்பக்கம் தங்க தலைவி நின்றால் நிச்சயம் மாபெரும் வெற்றிபெறுவார்
எதிர்ப்புகளை எல்லாம் வெற்றியாக்கும் அவரின் ஜாதகம் அங்கும் செயல்பட ஆரம்பித்தாயிற்று, இனி பூட்டு போட்டவர்கள் ஓடி ஓளிய வேண்டியதுதான்
ஏதோ காங்கிரஸ் தலைவர்களுக்கு சிலை வைக்கும் விழாவின் அடிக்கல் நாட்டும் வைபவமாம் அங்குதான் இந்த கூட்டமும் அதனால் வழக்கும் பதியபட்டிருக்கின்றதாம்
அச்சிலைகள் நிறுவபடட்டும் அதே சிலைகளுக்கு முன்னால் “இச்சிலை அமைக்க வழக்கு சுமந்த வாழ்வரசி” என தலைவியின் சிலை சங்கத்தால் அமைக்கபடும்
தலைவி பார்க்காத வழக்குகளா? பெறாத விடுதலையா? அதனால் இந்த வழக்கால் அவரின் பயணம் தடைபடாது மாறாக மக்கள் அனுதாபம் பெருகும்
நெல்லை பக்கம் தன் ஆளுமையினை நிரூபித்து மாபெரும் மக்கள் கடலை திரட்டிகாட்டிவிட்ட தங்க தலைவிக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
நீ கலக்கு ராசாத்தி….
(தலைவிக்கு 30 நிமிடம் கூடுதலாக பேசியதற்கு வழக்காம்,
ஆனால் ஒருவர் 24 நாழிகை முழுக்க, நள்ளிரவு, நடுசாமம், அர்த்த ஜாமம், இரண்டாம் சாமம், வைகறை எல்லாம் தாமரை மலர்ந்தே தீரும் என பேசிகொண்டே இருக்கின்றார், அவர் மீதெல்லாம் வழக்கே இல்லையாம்..)