காங்கிரசும், திமுகவும் சேர்ந்து சென்று பேசி காவிரியினை மீட்டால் என்ன? : தமிழிசை சீற்றம்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து சென்று பேசி காவிரியினை மீட்டால் என்ன? : தமிழிசை சீற்றம்
வெறுமனே காங்கிரஸ் என அம்மணி சீறியிருந்தால் குமரி அனந்தனுக்கு மாரடைப்பும், வசந்தகுமாருக்கு பக்கவாதமும் வந்துவிடும் என்பதால் இவர் திமுகவினையும் சேர்த்துகொண்டார்
ஏதோ எடியூரப்பா முதல்வராக இருந்தபொழுது இவர் காரைக்காலமையார் போல தலையால் நடந்துசென்று காவிரி மீட்டது போல பேசிகொண்டிருக்க்கின்றார்.
மத்தியில் நடப்பது பாஜக ஆட்சி, மாநிலத்தில் அவர்களின் செருப்பு ஆள்கின்றது. ஆள்வது இவர்களாம் ஆனால் நீதிபெற திமுகவும் காங்கிரசும் செல்லவேண்டுமாம்
அவர்கள் செல்ல இவர்கள் ஏன் ஆட்சியில் இருக்கவேண்டும்?
அக்கோவ், பேசாமல் நீங்கள் காங்கிரசுக்கு வந்துவிடுங்கள் அதன் பின் உங்களை காங்கிரஸ்காரக அனுப்பி பேச சொல்கின்றோம் சரியா?
உங்களை மட்டும் பேச அனுப்பினால் போதாதா? அதன் பின் கன்னடன் காவேரியினை அரபிகடலுக்கே அனுப்பிவிட மாட்டானா?