இலங்கையின் 70ம் நாள் சுதந்திர தினவிழா
இலங்கையின் 70ம் நாள் சுதந்திர தினவிழா கொண்டாடபட்டிருக்கின்றது
இலங்கை மிக சிறிய தீவுதான், அதன் மக்கள் தொகை 2 கோடிதான் ஆனால் தந்திரங்களிலும் அசாத்திர ராஜவியூகத்திலும் அந்நாடு பொல்லாதது
தமிழர்கள் வாழ்ந்த தீவு பின் சிங்கள குடியேற்றம் நடந்தது அதன் பின் புத்தம் தளைத்தது, பின்னாளில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வளர்ந்தன.
போர்த்துகீசியர் அங்கு காலடி வைக்கும்வரை அந்நாட்டின் அழகும் வளமும் வெளிதெரியவில்லை, பிரிட்டிசார் அந்நாடு ஒரு சொர்க்கம் என கண்டனர். அட்டகாசமான துறைமுகம், மழை வளம், மண் வளம், மலைவளம் என பல வாய்ப்புகளை அந்நாடு கொண்டிருந்ததை கணித்தனர் பிரிட்டிசார்
அவர்கள் ஆட்சியில் இலங்கை வேகமாக வளர்ந்தது 1930களில் அது இன்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடான அளவில் பணக்கார நாடாக இருந்தது, பெரும் செல்வம் கொட்டி கிடந்தது.
தேயிலையும் இன்னபிற பொருட்களும் அவர்களுக்கு அள்ளி கொடுத்தன, கொழும்பு துறைமுகம் கொட்டி கொடுத்தது
1930களிலே ஆசியநாடுகளுக்கு இனி சுதந்திரம் கொடுத்தாக வேண்டும், கொடுத்தால் அவை தங்களுக்குள்ளே அடித்து சாக வேண்டும் தங்கள் பஞ்சாயத்தை தேடி ஓடிவரவேண்டும் என்ற நரிதந்திரத்தில் இறங்கியது பிரிட்டன்
அப்படி மலையக தமிழருக்கும் யாழ்பாண தமிழருக்கும் இருந்த பிளவுகள் பெரிதாயின, கிழக்கு இஸ்லாமியருக்கும் யாழ்பாண சிங்களருக்கும் இருந்த வெறுப்பு வளர்ந்தது. அங்கு பெருமளவில் இருந்த மலையாளிகள் மீதும் இவர்களுக்கு வெறுப்பு வந்தது
போதாகுறைக்கு வெள்ளையனின் ஆதரிவில் வளர்ந்த அனாரிக தர்மபாலா என்பவர் சிங்களரிடையே பவுத்த வெறியினை ஊட்டி வளர்த்தார், ஈழம் பிற்காலத்தில் எரிய இவர்தான் காரணம்
ஆனால் சுதந்திரம் பெறும் வரை ஈழதமிழர் சிங்களர் ஒற்றுமை பலமாக இருந்தது, காரணம் இவர்களுக்கு பொது எதிரியாக மலையக மக்கள், மலையாளி, கிழக்கு முஸ்லீமகள் இருந்தனர்
சிங்களர் இவர்களை அடிப்பர், கொல்வர் அதற்கு யாழ்பாண வழக்கறிஞர்கள் லண்டன் சென்று மீட்டுவருவர், சிங்களர் அந்த வக்கீல்களை தேர் இழுத்து கொண்டாடுவர் , இப்படியும் ஒரு காலம் இருந்தது
சிங்கள சமூகம் ஒருகாலமும் தங்களுக்கு எதிராக திரும்பாது என ஈழத்தவர் நம்பிய காலத்தில்தான் சுதந்திரம் கிடைத்தது
அதன்பின்பு தொடங்கியது சிக்கல், மக்களாட்சியின் பெரும் பலமும் பலவீனமும் வாக்குவங்கி. பெரும்பான்மை வாக்கு சிங்களரிடம் இருந்தது பின் அரசு என்ன செய்யும் அப்பக்கம்தான் சாயும்
அனாரிகா தர்மபாலாவினை வெள்ளையன் ஏன் வளர்த்தான் என்பது 40 ஆண்டுகளுக்கு பின்புதான் தெரிந்தது, ஆம் அவன் ஏற்றிவைத்த அந்த புத்த பேரினவாத தீ அப்பொழுதுதான் எரிய தொடங்கியது
பிரிட்டன் நினைத்தது நடந்தது. பிரிட்டனின் குணமே இது எங்கெல்லாம் ஆண்டார்களோ அங்கெல்லாம் தங்கள் தயவு காலமெல்லாம் தேவை என்பது போல செய்துவைத்தார்கள். இந்தியா அதில் தப்பியது ஆயினும் பிரிட்டன் இடத்தை பிடித்த அமெரிக்கா பாகிஸ்தானை வைத்து ஆடியது
பிரிட்டன் எதிர்பார்த்தபடி ஈழதமிழர் பிரிட்டனை பஞ்சாயத்திற்கு அழைத்தார்கள், உலக நாடுகள் எல்லாம் இலங்கை விவகாரத்தில் குதித்தன
ஆனால் பெரும் போராட்டத்தை எல்லாம் தன் ராஜதந்திரம் மூலம் முறியடித்து எந்த நாட்டுக்கும் தாங்கள் கட்டுபட்டவர்கள் அல்ல என தந்திரமாக சாதித்தது இலங்கை
ஈழபோராட்டத்தை அவர்கள் எதிர்கொண்ட விதமே அலாதியானது, மிக அருமையான திட்டம் அவை. எந்த இந்தியா புலிகளை வளர்த்ததோ அதே இந்தியாவினை புலிகளோடு மோதவைத்து ராஜிவினையும் பின் பிரபாகரனையும் அழித்த பெரும் தந்திரம் அவர்களுடையது
கொடும்போர் முடிந்து இப்பொழுது கொஞ்சம் மேல் எழும்பும் நாடு இலங்கை, 2035ல் ஆசியாவின் பணக்கார நாடாக அது உருவாகும் என ஆய்வுகள் சொல்கின்றன
ஒருவிஷயம் உண்மை , அக்கொடும் போர் நடந்திராவிட்டால் இன்று சிங்கப்பூர் அளவிற்கு அத்தேசம் நிச்சயம் சென்றிருக்கும், போர் அந்த நாட்டை நாசமாக்கிற்று
சந்தேகமின்றி சொல்லலாம், யூத ஜப்பானிய இனங்களை போலவே தந்திரத்தில் தேர்ந்த தேசம், சிங்கள தேசம்
இப்பொழுதும் அமெரிக்கா, சீனா, இந்தியா என கண்ணாமூச்சி ஆடி காரியம் சாதிக்கின்றது. இந்தியா இலங்கை நட்புநாடு என சொல்லிகொள்கின்றது
இலங்கை அப்படி நினைக்கவில்லை, தன்நாட்டில் நிகழ்ந்த அத்தனை அழிவுகளுக்கும் இந்தியாவே காரணம் என மனமார நம்பிக்கொண்டிருக்கும் நாடு. நிச்சயம் அது இந்தியாவினை பகைக்காது அப்படியே முழுக்க நம்பாது
மிக வேகமாக வளரும் நாடு அது, அமெரிக்காவும் சீனாவும் போட்டி போடு முதலீடு செய்கின்றன
இன்னும் 20 ஆண்டுகளில் ஐரோப்பா சென்று பார்க்கும் அழகினை நாம் இலங்கையிலே பார்க்கலாம், நிச்சயம் நடக்கும்
அந்த அழகிய தேச மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
(பிரிட்டனின் கணக்கு இன்றும் தொடர்கின்றது , 70ம் தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் இளவரசரை அழைத்தார்கள், நாடு அமைதிபெற்றாயிற்று என காட்ட விரும்பினார்கள் அவரோ பல கணக்குகளை போட்டு அமைதியாக வராமல் இருந்துவிட்டார்
வந்தால் பிரிட்டன்வாழ் ஈழதமிழர் பொங்குவார்கள், நாளை ஈழத்தவர் எல்லை மீறினால் சிங்களன் பக்கம் சென்றால் போதும்
ஆக பிரிட்டிசாரின் கணக்கு இன்றும் சரியாகிகொண்டே இருக்கின்றது)