திமுக அதிமுகவாக மாறிகொண்டே வருகின்றது

இப்பொழுதெல்லாம் திமுகவில் பலரை பேசகூடாது என சொல்லிவிட்டார்களாம், சிலருக்கு தடை உத்தரவாம்

அக்காலத்தில் வெற்றிகொண்டான் முதல் இன்னும் பலர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காது கூசும் ரகம். கலைஞர் கண்டும் காணாதது போல் இருந்து கொள்வார்

சர்ச்சைகள் வரும், இவர்களை தண்டித்தால் எதிரணிக்கு பயந்தது போலாகும் அவர்கள் மனதளவில் தைரியமமாவார்கள் என்பதால் கலைஞர் அதெற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கவில்லை

இப்பொழுதுள்ள திமுக அந்த தவறை செய்கின்றது, இதெல்லாம் எதிர்கட்சிகளுக்கு திமுக அஞ்சுகின்றது என்பதற்கு அடையாளங்கள்

தலமையும் பேசாது, பேசுபவர்களையும் பேசவிடாது

ஆக திமுக அதிமுகவாக மாறிகொண்டே வருகின்றது