தேடி சென்ற கப்பலும் நேற்று காணாமல் போய்விட்டதாம்…
மலேசிய விமானம் காணாமல் போய் 4 வருடம் ஆன நிலையில் தேடல் தொடர்ந்தது, இப்பொழுது அடுத்த அதிர்ச்சி வந்திருக்கின்றது
ஆம் அதனை தேடி சென்ற கப்பலும் நேற்று காணாமல் போய்விட்டதாம், அதிர்ந்து நிற்கின்றது உலகம்
பர்முடா முக்கோணம் போல ஏதோ மர்மம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன, இது பசிபிக் கடலில் ஆங்காங்கு நிலவுகின்றது என முன்பே செய்திகள் சொன்னாலும் இப்பொழுது திகிலடைய செய்கின்றது
மலேசிய விமானம் இந்த மர்ம இடத்தில் காணாமல் போயிருக்கலாம், ஆனால் இந்த மர்ம இடத்திற்கு ஏன் வந்தது? என்ற மர்மம் தீரவே இல்லை
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வந்த ரயில் ஜதரபாத் பக்கம் காணாமல் போனதாக தேடினால் எப்படி இருக்கும்? இதே நிலைதான் இந்த விமானத்தின் கதை அது தொலைந்த இடம் அப்படி
எப்படியோ சென்ற கப்பலோ விமானமோ மாயமாக மறையும் இடம் என ஒரு பகுதி குறிப்பிடபட்டாயிற்று, இனி இந்திய, தமிழக அரசியல்வாதிகள் விமானம் அப்பக்கம் சென்றால் மிக நல்லது.