சாமியார் + தொழிலதிபரான பாபா ராம்தேவ் ஐஐடியில் சிறப்புரை

Image may contain: outdoor

நாடு மிக நாசமாய் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கு பெரும் உதாரணம் சமீபத்தில் நடந்திருக்கின்றது

அதாகபட்டது இந்தியாவின் பெரும் அறிவு களஞ்சியமாக கருதபடுபவை ஐஐடிக்கள், வெளிநாடுகளால் இந்தியாவில் மதிக்கபடும் கல்விநிலையங்களில் முதலிடம் அதற்குத்தான்

அப்படிபட்ட தரம்வாய்ந்த கல்வி நிலையத்தில் ஒரு விஞ்ஞானியினை பேச அழைத்தார்கள், இப்பொழுது இந்தியாவில் விஞ்ஞானிகள் இரண்டே ரகம் ஒன்று யோகா சாமிகள் இன்னொன்று பசுமாட்டின் ஹோமிய ஆராய்ச்சியாளர்கள்

Image may contain: 1 person, beardஇதில் இப்போதைய சாமியார் + தொழிலதிபரான பாபா ராம்தேவினை ஐஐடியில் சிறப்புரை ஆற்ற அழைத்தார்களாம், அந்த பிரபல விஞ்ஞானி என்ன சிறப்புரை ஆற்றியிருக்கின்றார் என்றால் இப்படித்தான்

“புற்றுநோய் வர காரணம் முன் ஜென்ம பாவம். இந்த ஜென்மத்தில் நீங்கள் அதிக பாவம் செய்தாலும் புற்றுநோய் வரும், இதனை கடவுளே தீர்க்க முடியும்”

எவ்வளவு அருமையான ஆராய்ச்சி பார்த்தீர்களா? உலகின் முண்ணணி விஞ்ஞானிகள் ஒரு பயல் இதற்கு பதில் பேசமுடியும்?

இப்படி எல்லாம் ஐஐடியில் கிறுக்கு சாமியாரை பேசவிட்டால் அதன் தரம் என்னாகும்? உலகம் எப்படி மதிக்கும் என யாருக்கு கவலை? ஒருவருக்குமே இல்லை

ஐஐடியில் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் அளவு வேண்டாம் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள், பாபா அணுசக்தி மன்ற விஞ்ஞானிகள் எத்தனையோ விஞ்ஞானிகளில் ஒருவரை அழைக்காமல் இந்த சாமியாரை ஏன் அழைக்க வேண்டும்?

இதுதான் மோடி அரசின் நாசமாய் போன அரசியல், சாமியார்களை ஏதோ பெரும் பிம்பமாய் தூக்கிபிடிக்கும் அரசியல்

ஐஐடியே இந்தபாடு படும்பொழுது பாரதியார் பல்கலைகழகத்தில் ஊழல் என சொல்வதில் என்ன ஆச்சரியம்?

ஐஐடிக்கு பாபா ராம்தேவ் வந்திருப்பதால் இனி பிரபல கல்லூரிகளுக்கு நித்தி, ஜக்கி மற்றும் அகோரி சாமியார்கள் எல்லாம் வருகை தந்து தங்கள் பொன்னான கருத்துக்களை போதிக்க வாய்ப்பிருக்கின்றது

பின் எங்கிருந்து உருப்படும் கல்வி கூடங்கள்?

அப்துல்கலாம் போன்ற மாமேதைகள் உரையாற்றிய ஐஐடியில் பாபா ராம்தேவும் பேசுகின்றார் என்றால் நிலமை எவ்வளவு மகா மோசம் என நீங்களே முடிவு செய்யுங்கள்.

இந்த ஆட்சி எவ்வளவு சீக்கிரம் முடிகின்றதோ, அந்த அளவு நாட்டின் எல்லா துறைகளுக்கும் நல்லது.