சென்னையில் 75 ரவுடிகளை பிடித்து காவல்துறை அசத்தல்

சென்னையில் 75 ரவுடிகளை கூட்டமாக பிடித்து அசத்தியிருக்கின்றது காவல்துறை. தேடபட்ட பிரபல ரவுடி பினு தன் அடிப்பொடிகளுடன் ஹேப்பி பெர்த்டே கொண்டாடிகொண்டிருந்த பொழுது, ஹேப்பியாக பிடித்திருக்கின்றது காவல்துறை

இதில் மாணவர்கள் உண்டாம், சில வழக்கறிஞர்களும் இருந்ததாக சில செய்திகள் சொன்னது, இன்னும் யாரெல்லாம் இருந்தார்களோ தெரியாது

இந்த பினு என்னும் ரவுடி சாதாரணம் அல்ல, சென்னையில் கொலை, கொள்ளை திருட்டு ஏன ஏக வழக்குகள் இருக்கின்றதாம். எராளமான ரவுடிகள் துணையோடு “சிங்கம் 1” படத்து பிரகாஷ்ராஜ் போல சுற்றிவந்தவனை, காவல்துறை சிங்கங்கள் தூக்கிவிட்டன‌

இவ்வளவு பெரிய வீர ரவுடி சிக்கியும் ஏன் பல அல்ட்ராசிட்டிகள் வாய்திறக்கவில்லை?

இந்த பினு மலையாளியாம் அதனால் சத்தமில்லை.

வள்ளுவனும், சிபி சக்கரவர்த்தியும் வாழ்ந்த தமிழகத்தில் கேரள ரவுடியா? ஏய் வந்தேறி ரவுடி என பொங்கி இருக்கலாம் ஆனால் பொங்கவில்லை

இதே பினு தமிழனாக இருந்திருந்தால் வீரப்பன், பிரபாகரன் வரிசையில் “சென்னை காவலன்” பினு என கிளம்பியிருப்பார்கள், நல்ல வேளையாக அவன் மலையாளியாகி தொலைந்தான்