தமிழகத்தில் காமெடி ஆட்சி நடக்கின்றது
தமிழகத்தில் காமெடி ஆட்சி நடக்கின்றது என்ற விஷயம் தெரிந்தாலும் உள்ளே நடந்துகொண்டிருப்பது மகா சீரியசான் விஷயங்கள், சில கோமாளிகளை பதர்களை ஏதோ சொல்லி போக்கு காட்டிவிட்டு பெரும் மூளையுடன் அதிபயங்கர திட்டம் எல்லாம் தீட்டபடுகின்றன
ரஜினியும் கமலும் இன்னும் சிலரும் அதிரடியாக அரசியலுக்கு வருவது ஏன் என்றால் வெற்றிபெற அல்ல, மாறாக திமுகவின் வோட்டு வங்கியினை பாதிக்க, அப்படியே யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போய், சகல குழப்பமாகி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் திட்டத்தின் முதல்படி அது
இது வெளியே தெரிந்தாலும் தெரியா ரகசிய வலையொன்று தமிழகத்தில் பின்னபடுகின்றது? அது என்ன என்றால் உள்ளாட்சி தேர்தல் ஏன் தள்ளி வைக்கபடுகின்றது என்பதை நோக்கினால் புரியும்
வார்டு வரையரைகளை சீர் செய்கின்றோம் என மிக நுட்பமாக திமுக வெல்லும் இடங்களை எல்லாம் வெட்டி துண்டுபோட்டு ஒட்டுகொண்டிருக்கின்றார்கள், கட்டிங் டிங்கரிங் எல்லாம் நடக்கின்றது
அதாவது உள்ளாட்சி தேர்தல் என்பதை சாதி,மதம், இனம்,குடும்பம்,மொழி என பல விஷயங்கள் முடிவு செய்யும். இதற்கு ஏற்றவாறு பகுதிகளை பிரித்தால் அட்டகாசமாக வெல்லலாம்
இப்படி சீரமைக்கின்றோம் எனும் பெயரில் வெற்றிக்கு ஏற்றபடி துண்டாடும் விஷயம் தமிழகத்தில் நடக்கின்றது, இன்னும் உள்ளாட்சி தேர்தல் தள்ளிபோகும் மர்மத்தின் மிக முக்கிய பங்கு இது
ஆதாரம் வெண்டுமென்றால் இதோ கலைஞர் கருணாநிதியின் சொந்த தொகுதியிலே அரசியல் ஆடுகின்றார்கள், சித்துவிளையாட்டுக்கள் தூள் பறக்கின்றன
இவை எல்லாம் சாதாரணம் அல்ல, வெற்றியினை நிர்மானிக்கும் விஷயங்கள்.
இதில் களமிறங்கி பெரும் போராட்டம் செய்து தங்களுக்கு விரிக்கபட்டிருக்கும் வலையினை கிழித்தெறிவது திமுகவின் கடமை, அதுவோ பெரும் கனவு அரசியலில் இருப்பதாக தோன்றுகின்றது
மாவட்டவாரியாக சென்று கட்சியினரை சந்திக்க வேண்டிய ஸ்டாலின் அறிவாலயத்தில் இருந்து ஏதோ மல்டி நேஷலனல் கம்பெனி எம்டி போல அறிவாலயத்தில் அமர்ந்து நேர்காணல் நடத்துகின்றார்
அங்கோ கலைஞரின் சொந்த தொகுதியினையே பிரிந்து அடித்து உள்ளாட்சி தேர்தலில் திமுகவினை மண்ணை கவ்வ வைக்க கடும் முயற்சி நடக்கின்றது
இது சீரமைப்பு எனும் பெயரில் தமிழகம் முழுக்க நடக்கின்றது என்கின்றார்கள், ராணுவ மொழியில் சொல்வதென்றால் சுற்றி குழிவெட்டி தயாராகின்றார்கள்
இதனை சொன்னால் சிலர் எங்கள் தளபதிக்கு எல்லாம் தெரியும் நீ வாயினை மூடு என்கின்றார்கள்
சிலரோ தளபதிக்கு தெரிந்தாலும் என்னாக போகின்றது என்கின்றார்கள், அதில் அர்த்தம் இருக்கும் போலிருக்கின்றது
இப்படி மிக அஜாக்கிரதையாக இருக்கவேண்டியது, நாளை வெற்றியினை தவறவிட்டால் அவன் குக்கரில் சோறு பொங்கினான், ஆணையம் குழம்பு ஊற்றியது, மத்திய அரசு பொரியல் வைத்தது என புலம்பி திரியவேண்டியது
இந்த புலம்பல் வராமல் இருக்க இப்பொழுதே சில முன்னெச்செரிக்கை விஷயங்களில் திமுக விழிப்பாக இருப்பது நல்லது