திருப்பூர் பக்கம் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு கருப்புகொடி
திருப்பூர் பக்கம் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு கருப்புகொடி காட்டி எதிர்ப்பு
இந்த ஆளுநருக்கு என்ன சிக்கல்? வேலை இல்லாத சிக்கல் வேறு ஒன்றுமில்லை.
ஜெயா இருந்தால் அனுதினமும் அமைச்சர்களை மாற்றி பட்டியலை அனுப்பிகொண்டே இருப்பார், ஆளுநருக்கு வேலை இருந்தது
மாற்றபடும் அமைச்சர்கள் பட்டியலுக்கு கையெழுத்திட்டே அக்கால ஆளுநர்கள் களைத்துபோனார்கள்.
கலைஞர் முதல்வராக இருந்தால் அவர் ஆட்சியினை ஏன் கலைக்கவில்லை என ஜெயா ஆயிரம் கேள்விகளை கேட்டுகொண்டே இருப்பார், மீறி பேசினால் சென்னா ரெட்டி நிலைதான்.
இதனால் ஜெயாவிற்கு அஞ்சி ஆளுநர் மாளிகைக்குள்ளே அடைந்து கிடந்தார்கள் அவர்கள்.
ஆக இருவரும் இல்லா நிலையில் ஆளுநருக்கு வேலை இல்லை, விலங்கு கழற்றிய யானையாக சுற்றி வருகின்றார்
75 ரவுடிகளின் செல்போனை விசாரித்ததில் காவல்துறை அதிகாரிகள் பெயரும் சிக்கியது, தப்பிய ரவுடி பினுவினை பிடிக்க காவல்துறை தீவிரம்
இனி அந்த பினு அகப்படுவான்? அகப்பட்டாலும் உயிரோடு இருப்பான்?