மேற்கு ஆசியா சுற்றுபயணம் செல்கின்றார் மோடி…
இம்முறை மேற்கு ஆசியா சுற்றுபயணம் செல்கின்றார் மோடி, பாலஸ்தீனம், ஐக்கிய அரபு மற்றும் ஓமானுக்கு விசிட்டிங்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரைக்கும், ரமல்லாவிற்கும் செல்கின்றார் மோடி, ரமல்லாவில்தான் யாசர் அராபத்தின் தற்காலிக கல்லறை உள்ளது. மோடி அங்கு அஞ்சலி செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது
ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தபின் மோடி செல்லும் பயணம் என்பதால் இஸ்ரேல் முறைக்கத்தான் செய்யும்
பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் கைகொடுத்துவிட்டு கலைஞரையும் சந்தித்த மோடிக்கு இதெல்லாம் சாதாரணம்
அடுத்து அபுதாபி செல்வாராம் அங்கு இந்து ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டுவதாக செய்திகள். இது ஒரு பூசாரியோ மடாதிபதியோ செய்யவேண்டிய வேலை ஆனால் பிரதமரையே செய்ய வைத்து கலாய்க்கின்றது அபுதாபி
பாபர் மசூதியினை கட்டிவிட்டு இங்கு ஆலய அடிக்கல் நாட்ட வாருங்கள் என ஒரு குரலும் எழாதவரை சிக்கல் இல்லை.
அதன் பின் மோடி ஓமான் செல்கின்றாராம் , ஒமான் அரபு அரசியலில் அதிகம் தலையிடா நாடு. அங்கு சென்றுவிட்டு பின் இந்தியா திரும்புவாராம்
மோடியின் பாலஸ்தீன விசிட் மிக உன்னிப்பாக உற்று நோக்கபடுகின்றது. உலகில் இஸ்லாமியர் மிக கணிசமாக வாழும் நாடு இந்தியா என்பதால் மோடியின் பாலஸ்தீன பயணத்தை பல நாடுகள் கண்காணிக்கின்றன.
வல்லபாய் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சினை வந்திருக்காது: மோடி
இந்த இந்துமகா சபை அட்டகாசம் இல்லை என்றால் காந்திகொலை நடந்திருக்காது ,
பாபர் மசூதி இடிக்கவில்லை என்றால் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கவும் முடியாது
அது இருக்கட்டும், இந்த சுபாஷ் சந்திரபோஸ் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் , சங் பரிவார் எல்லாம் ஆரம்பத்திலே கிள்ளி எறியபட்டிருக்கும்.