இந்த நாள் ….

Image may contain: one or more people and close-up

நவீனகாலத்தில் உலகமும் தமிழகமும் காலடி எடுத்து வைத்த அந்த 1900ம் வருடங்களில் தமிழகமும் விழிக்க தொடங்கியது

ஆங்கில அரசில் பிராமணர் எல்லா இடங்களிலும் இருந்தனர், மற்றவர்களுக்கு ஒன்றுமே இல்லை. மற்றவர்கள் என்றால் அவர்களும் இன்று உயர்சாதி என சொல்லிகொள்பவர்களே, அவர்கள் படித்திருந்தாலும் பிராமண சக்திகளை உடைக்க முடியவில்லை

பிட்டி தியாகராசர், டி எம் நாயர் போன்றோர்தான் முதல் குரல் கொடுத்தனர், கொஞ்சம் கொஞ்சமாக குரல் ஒலித்தது பிராமணர் அல்லாதோர் சங்கம் தொடங்கியது, அப்பொழுதும் பிராமணரை அசைக்க முடியவில்லை

மாண்டேகு செம்ஸ்போர்டு, சைமன் கமிஷன் எல்லாம் இருபக்கமும் ஆடின அல்லது பிராமணருக்கு ஒரு பக்கம் ஆதரவளித்துகொண்டே இந்த எதிர்ப்பாளருக்கும் கண்ணீர் வடித்தது.

காங்கிரசும், ஐரோப்பாவிலிருந்து வந்து ஆரியம் வளர்த்த அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கமும் பிராமணர் பக்கமே இருந்தன‌

பிராமணர் அல்லா இயக்கம் நீதிகட்சியாயிற்று

ஓரளவு போராடிய நீதிகட்சி காந்தி தேர்தலை புறக்கணித்தபொழுது சென்னை மாகாண ஆட்சியினை பிடித்தது, பல மாற்றங்களை செய்தது

தேவதாசி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, ஆலய விவகாரத்தில் மடங்கள் தலையீடு தடுப்பு போன்றவற்றை எல்லாம் அன்றே சொன்னது நீதிகட்சி ஆனால் பாதிதான் நிறைவேறியது, பொப்பிலி அரசர் முதல்வரானார்

விடுமா காங்கிரஸ்? அன்று வசதியுள்ளவர்களுக்கு இருந்த வாக்குரிமை எல்லோருக்கும் என சொல்லி களமிறங்கி மறுபடியது சரிந்தது நீதிகட்சி

இனி நீதிகட்சி அவ்வளவுதான் என நினைத்த காலத்தில்தான் பெரியார் புயல் வீசிற்று, நீதிகட்சியினை எப்படி பிராமணர் சரித்தனர் என்றால் ஒரே விஷயம் கடவுள்.

மதத்தை அழிக்காமல் பிராமணரை விரட்டமுடியாது என சொன்ன பெரியார் அட்டகாச சவாலை கொடுத்தார்

அதில் மறுபடியும் சமூக சீர்திருத்த‌ நெருப்பு அணல் வீசிற்று, நிச்சயமாக சொல்லலாம் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் சிக்கி இந்நாட்டை பிராமணரே நடத்திய காலத்தில், நீதிகட்சி இல்லாமல் போன காலத்தில் அந்த பிராமண அல்லோதருக்கான போராட்டத்தை பெரியாரே அணையாமல் கொண்டு சென்றார்

பின் நாடு குழப்பமான காலத்தை கடந்து சுதந்திரமும் பெற்று சுதந்திரமானது. நாட்டுபற்று எனும் ஒற்றை விஷயத்தில் காங்கிரசின் பிராமண ஆதிக்கம் எல்லாம் மக்களை மறக்க வைத்து அதனை கொண்டாட செய்தன, பெரியார் எச்சரித்தபடியே இருந்தார்

திராவிட கொள்கை அரசியலுக்கு வராமல் இங்கு எந்த மாற்றமும் நடக்காது என அண்ணா தலமையில் அது அரசியல் கட்சியாயிற்று

உண்மையில் நீதிகட்சியின் மறு அரசியல் வடிவமே திமுக‌

1950ல் காங்கிரஸ் இந்நாட்டின் ஒரே கட்சியாயிற்று எல்லா மாநிலங்களிலும் ஆண்டது, தமிழகத்திலும் ஆண்டது

கொஞ்சம் கொஞ்சமாக அது தன் இன்னொரு முகத்தை காட்ட ஆரம்பித்தது, குலகல்வி, இந்தி என அது மெதுவாக தலையினை உயர்த்தியபொழுது பொங்கி எழுந்தது தமிழகம்

60 ஆண்டுகளுக்கு முன்பு பிட்டி தியாகராசர், நடேச முதலியார், டிம் எம் மாதவனின் உழைப்பு எல்லாம் வீணாகவில்லை என காட்டி நின்றது தமிழகம் , அண்ணா முதல்வராகும் பொழுது அதுதான் தெரிந்தது

அண்ணாவும் 20 மாதத்தில் மறைந்தார்

அதன் பின் இதே நாளில் 10.02.1969ல் நீதிகட்சியின் பெரும் நோக்கம் அதன் கனவினையும் மீறி நடந்தது

ஆம் நீதிகட்சி என்றாலும் அதில் நாயுடு முதல் பிள்ளை , செட்டி என அடுத்தகட்ட சாதிகளே இருந்தன. அடிமட்ட சாதி, பஞ்சம சாதி என சொல்லபட்டவற்றை அவை ஆதிதிராவிடர் என அழைத்ததோடு சரி, அவற்றில் யாரும் கட்சியில் இல்லை

கலைஞர் இதே நாளில் பதவி ஏற்றபொழுது அந்த அதிசயம் நடந்தது , 1000 ஆண்டுகளுக்கு முன்பு, ஏன் 60 ஆண்டுகளுக்கு முன்பு கூட அது நினைத்து பார்க்க முடியாததது, பஞ்சம சாதியில் ஒருவன் முதலமைச்சர் ஆவார் என்பது கனவிலும் நடக்காதது

திமுக அந்த மகத்தான சமதர்ம சாதனையினை நிகழ்த்தியது, ஆரியம் தலையில் அடித்து அமர்ந்தது இதே நாளில்தான்

இன்னொரு விஷயம் வருத்தத்தோடு சொல்ல வேண்டும்

சாதியால் மிக தாழ்த்தபட்ட, ஒடுக்கபட்ட இனத்தின் தலைமகனான கலைஞர் மாநில முதல்வர் ஆனபின்பே அவருக்கான எதிர்ப்புகள் வலுத்தன‌

மிகபெரும் எதிர்புகளை தாண்டி பதவிக்கு வந்த கலைஞருக்கு அடுத்தகட்ட சவால்கள் அப்பொழுதுதான் தொடங்கின‌

கலைஞருக்குள்ள சிறப்பு எங்கு எப்படி செயல்படவேண்டுமோ அப்படி செயல்படுவார், எதிரி 100 மைல் வேகமென்றால் கலைஞரும் 100மைலில் செல்வார் எதிரி 1000 மைல் என்றால் அதே வேகமும் பலமும் கலைஞருக்கும் வரும்

அப்படி முதல்வரான பின்பே கடும் சவால்கள் அவருக்கு காத்திருந்தன, ஆனால் அட்டகாசமாக சமாளித்தார் எந்த ஒரு சிக்கலும் அவரை முடக்க முடியவில்லை

ராமசந்திரன், ஜெயா, ஸ்பெக்ட்ரம் என எல்லாவற்றையும் வென்றுகாட்டிவிட்டுத்தான் இன்று ஓய்வில் இருக்கின்றார்

நீதிகட்சியிலும் சில ஆதிக்க சக்திகள் இருந்தன, அக்கால நடைமுறையில் அவர்கள்தான் படித்தவர்களாக இருந்தார்கள்

பெரியார் காலமே யாவரும் சமம் என்ற நோக்கினை கொண்டுவந்தது, அண்ணா அதனை அரசியலாகினார் இருவரும் இல்லாவிட்டால் தமிழக அரசியல் இம்மாற்றம் கண்டிருக்காது, அக்கால பிராமண காங்கிரஸ் எல்லாவற்றையும் தூக்கி கடாசியிருக்கும்

கலைஞர் இருக்குமிடமெல்லாம் பெரியாரும் அண்ணாவும் ஏன் சிரித்துகொண்டிருக்கின்றார்கள் என்றால் இந்த நன்றிக்காகத்தான்

இந்நாள் கலைஞர் முதன் முதலில் முதல்வரான நாள் என சிலர் கொண்டாடலாம், ஆனால் பெரும் பாலைநிலத்தை கால் வேக நடந்து அம்மனிதன் இளைப்பாற அமர்ந்த நாள் இது, அதன் பின் காலம் அவரை நெருப்பாற்றை நீந்த கட்டளையிட்டது, அந்த நெருப்பாறினை தாண்டி பல நாக பூமிகளையும் தாண்டி அம்மனிதனின் பயணம் நடந்துகொண்டே இருந்தது, இன்னும் நடக்கும்

ஒரு நாளும் நிம்மதியாக இருக்ககூடாது என்பது அவர் விதி, அவரே சொன்னது போல “துன்பம் வரும்பொழுது சிரி என்றார் வள்ளுவர், ஆனால் நான் சிரிக்கும்பொழுதெல்லாம் துன்பம் ஓடி வருகின்றது”

அம்மனிதனின் விதி அப்படி. அதுவும் விதி அம்மனிதனுக்கு கடும் சவால் கொடுக்க தொடங்கிய நாள் இதேதான்

இனி தான் மிக கடுமையாக சாகும்வரை போராடியே தீரவேண்டும் என கலைஞர் முடிவுசெய்த நாளும் இதேதான்