அமித்ஷா கோஷ்டி இதனை படித்து கொள்வது நல்லது
நீ ஏன் மோடியினை விமர்சிக்கின்றாய் என பொங்க தொடங்கிவிட்டார்கள் பக்தர்கள்
வரவர இந்த பக்தர்களுக்கும் தும்பிகளுக்கும் வித்தியாசமே இல்லா நிலை சென்றுகொண்டிருக்கின்றது.
கவனியுங்கள், முதல் 3 ஆண்டுகள் முடிவுயும் வரை மோடியினை யாரும் விமர்சிக்கவில்லை மனிதர் ஏதோ செய்ய முயல்கின்றார், கவனிப்போம் என்றுதான் மொத்த இந்தியாவே இருந்தது
ஆனால் காலம் செல்ல செல்ல குஜராத் மாடல் என்னவென்றால் என்னவென புரிய தொடங்கியது, அதாவது யாரும் கேள்வி கேட்க கூடாது, கேட்டால் செய்ய வேண்டியதை செய்வோம் எனும் ஒருவித மகோமத மனப்பான்மையில் இவர்கள் இறங்கிவிட்டது புரிந்தது.
குஜராத் மாடல் என்பது யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதுதான் போலிருக்கின்றது
இப்பொழுதெல்லாம் பலத்த சந்தேகம் வலுக்கின்றது. நீதிபதி லோயா விவகாரத்தில் இவர்கள் ஏன் அஞ்சவேண்டும்?. ஒரு நீதிபதி இயற்கையாக இறந்திருந்தால் இவர்கள் ஏன் இப்படி ஒருவித பதற்றத்தோடு அணுக வேண்டும்?
இப்பொழுது பலத்த சந்தேகம் கொடுத்திருப்பது ரபேல் விவகாரம், அதனை ரகசியமாக வைத்திருப்பார்களாம் யார் கேட்டாலும் பதில் தரமாட்டார்களாம்
அது அணுகுண்டு ரகசியம், ராணுவ ரகசியம் என்றால் யார் கேட்க போகின்றார்கள்? கேட்பது என்ன? இதன் விலை என்ன? எவ்வளவு கொடுத்தீர்கள்?
அவ்வளவுதானே தவிர, இந்திய ராணுவத்தின் அணுகுண்டுகள் என்ன? உலகெல்லம் எங்கெலலாம் இந்திய ஆயுதம் தயாராக இருக்கின்றது போன்றவற்றையா கேட்டார்கள்? கேட்கத்தான் முடியுமா?
ஒரு விமானம் வாங்கிய விவகாரத்தில் கூட ஏதேச்சதிர்காரம் என்றால் யார் கேள்வி கேட்கமாட்டார்கள்?
இது என்ன அமித்ஷாவும் மோடியும் கொடுத்த சொந்த பணத்தில் வாங்கியதா? இல்லை இதெல்லாம் மக்களின் பணம் அவர்கள் கேட்காமல் யார் கேட்பார்கள்?
இதில் வெளிப்படை தன்மை இல்லை என முகத்தில் அறையும் கூட்டம் அன்று போபர்ஸ் விவகாரத்தில் குதித்த குதி என்ன? ஆர்பாட்டம் என்ன?
ராஜிவ் இப்படி இதெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது என சொன்னாரா? இல்லை
மாறாக தன் கரங்கள் சுத்தமானது என நிரூபிக்க போராடினார், அதில் தன் உயிரையும் கொடுத்தார்
இவர்களை யாரும் உயிர்கொடுக்க சொல்லவில்லை மாறாக ரபேல் விவகாரத்தில் நடந்ததை சொல்ல கூடாதா? இது போன்ற விவகாரத்தில் பதவி இழந்து உயிரையும் விட்ட ராஜிவ் பைத்தியக்காரன் இவர்கள் எல்லாம் தந்திரத்தில் சிறந்தவர்களா?
நிச்சயம் காங்கிரஸ் ரபேல் விவகாரத்தில் இக்கேள்வியினைத்தான் கேட்க வேண்டும் ஆனால் கேட்கவில்லை
மோடி எனும் தனிமனிதனை யாரும் விமர்சிக்கவில்லை, பண ஒழிப்பு விவகாரத்தில் கூட அவர் சார்பாக இருக்கும் சில நியாங்களை பேசினோம்
ஆனால் இப்பொழுதெல்லாம் நாங்கள் யாருக்கும் பதில் சொல்லும் அவசியமில்லை என ஒருவித சர்வாதிகார போக்கில் இவர்கள் நடப்பதைத்தான் விமர்சிக்கின்றோம்
நாம் மட்டுமல்ல ராம்ஜெத்மலானி, யஷ்வந்த் சின்கா போன்ற கட்சியின் மூத்தவர்களும் அதனைத்தான் செய்கின்றார்கள்
நிச்சயம் இந்த மோடியும் அமித்ஷாவும் மாற வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் நிச்சயம் இத்தேசம் தூக்கி எறியும்
சர்வாதிகரிகள் யாரும் நிம்மதியாக ஆண்டு முடித்ததாக உலக சரித்திரத்தில் எங்குமே காணமுடியாது , அமித்ஷா கோஷ்டி இதனை படித்து கொள்வது நல்லது