முதலிடத்தை பிடித்திருக்கும் நாடு தென்கொரியா

புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் அமெரிக்கா பின் தள்ளபட்டுவிட்டதாம், ஆய்வுகள் சொல்கின்றன‌

முதலிடத்தை பிடித்திருக்கும் நாடு தென்கொரியா, ஆம் அது அந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கின்றது

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானால் ஆக்கிரமிக்கபட்ட நாடு அது, அதனை மீட்க வந்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஆளுக்கொரு பகுதியினை பிடித்து பின்னால் இருந்து ஆள தொடங்கின‌

பல நாடுகளில் இது நடந்தது, ஜெர்மனி ஆக்ரோஷமாக ஒன்றாகி இன்று எங்கோ சென்றாயிற்று

கொரிய மக்களுக்கும் ஒன்றாய் இருக்க ஆசைதான், ஆனால் வடகொரிய அரசுக்கோ அந்த ஒன்றான கொரியா கம்யூனிச கொரியாவாக இருக்க ஆசை, தென்கொரியாவோ அதெல்லாம் சரிவராது ஜனநாயக அரசாக இருப்பதே சரி என தன்வழியில் சென்றது

இன்று மிகபெரும் வெற்றியினை அடைந்திருக்கின்றது தென்கொரியா, வடகொரியா அப்படி அல்ல‌

கிராமங்களின் கிழவர்கள் வீம்புக்கு வளர்க்கும் பேரன்கள் என் தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? என சொல்லி திரிவார்கள் அப்படி வடகொரிய அதிபரும் முழு கொரியாவும் கம்யூனிசம் ஆகும் என மிரட்டிகொண்டிருக்கின்றார்

உண்மையில் வடகொரிய மக்களுக்கும் அந்த சனியனை விட்டு ஒன்றாகத்தான் ஆசைபட்டார்கள் இன்றுவரை படுகின்றார்கள்

ஆனால் ஒரு வல்லரசுக்கு இரு வல்லரசு அங்கு பக்கத்தில் இருக்கின்றது, ரஷ்யா சீனா என இரு யானைகள் இருக்கின்றன. எந்த நாடும் தன் எல்லை அருகே தன் இன்னொரு எதிரியின் எதிரி இருப்பதை தனக்கு பாதுகாவலாகவே கருதும்

வடகொரியா இருப்பது தங்களுக்கு அரண் என இந்நாடுகள் நினைத்துகொண்டிருப்பதே கொரியா இன்னும் இணையாமல் இருக்க காரணம்

இந்த வடகொரிய வெள்ளை தக்காளி போதையில் செத்தாலோ அல்லது மாரடைப்பில் போய் சேர்ந்தாலோ நிச்சயம் அந்நாடு ஒன்றாகும், இன்னும் சாதனை படைக்கும்

வல்லரசுகளால் பந்தாடபட்ட எத்தனையோ தேசங்கள் ஒன்றிணைந்து பெரும் உச்சம் தொட்டு நிற்கின்றன‌

இந்தியாவும் பாகிஸ்தானும் அப்படி இணைந்தால் எப்படி இருக்கும்?

இப்போதிருக்கும் இந்தியாவினை கண்டால் நிச்சயம் பாகிஸ்தானியர் காத தூரம் ஓடியே விடுவர் என்பது மட்டும் நிஜம்

பின்னொரு காலத்தில் நிச்சயம் இவை இணையலாம், காலம் வாய்ப்பு கொடுக்கும்