இனியாவது இங்கு மத நல்லிணக்கம் வளரட்டும்
ஐக்கிய அரபு சிற்றரசுகள் என்பது மிகசிறிய நாடுகள், நாடுகள் என சொல்வதை விட சில நகரங்கள்
பெட்ரோல் வளத்தில் எழும்பியவை இன்று பெட்ரோல் வளம் குறைவு , விலை குறைவு என பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றன
நீண்டகால திட்டத்தில் அவை இறங்குகின்றன. நிச்சயம் அவை இஸ்லாமிய நாடுகள் இஸ்லாம் அவர்களின் சரிபாதி உயிர். ஆனால் நாட்டின் வளப்பமும், வியாபாரமும் , நிலைத்தன்மையும் நிலைக்க உலகோடு ஒத்துபோதல் அவசியம், எல்லா மக்களும் அவர்களின் கலாச்சார மத அடையாளங்களோடு இங்கு வாழ்தல் அவசியம் என உணர்ந்திருக்கின்றன
அபுதாபி துபாய் பகுதியில் இந்தியர் அதிகம், தென்னிந்தியர் வட இந்தியர் வியாபாரிகள் என பலர் தொழில்செய்யும் பகுதி. அப்படி அந்த தொழில்கள் பெருக நாடு நலம்பெற அம்மக்களும் மகிழ்வாய் இருக்க அந்நாடுகள் விரும்புகின்றன
துபாய் தன்னை சுதந்திரமான நாடாக காட்டி கிறிஸ்தவ இந்து ஆலயங்களுக்கு அனுமதி அளித்து அந்நிய முதலீடுகளை குவிக்க தொடங்கி நெடுங்காலம் ஆயிற்று
இப்பொழுது அபுதாபி அதே பாணிக்கு திரும்புகின்றது
அதாவது ஐரோப்பிய நாடுகளை போல மத அபிமானம் முக்கியம் அதனை விட நாட்டு வளமும் முதலீடுகளும் முக்கியம் என அது உணர்கின்றது
துபாய் அபுதாபியில் இந்து ஆலயங்கள் எழும்புவது இந்த அடிப்படையில்தான், மதத்தை தாண்டி நாட்டிற்காய் அந்த அரசுகள் பெருந்தன்மையாய் நடக்கின்றன
இதில் யார் பாடம் படிக்கவேண்டுமோ இல்லையோ இந்தியாவின் பிரதமர் நிச்சயம் படிக்க வேண்டும்
இந்தியா இந்துக்களுக்கே என அட்டகாசம் செய்துவிட்டு , மற்ற நாட்டுகாரர்கள் மாட்டுகறியினை அங்கே உண்டுவிட்டு வரவேண்டும், தாஜ்மகாலை எல்லாம் கோவிலாக்குவோம், இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என ஒரு மாதிரி பேசிதிரிபவர்களை அடக்கி இந்நாடு எல்லா மத மக்களுக்கும் பாதுகாப்பான நாடு முதலீட்டுக்கு ஏற்ற நாடு என்பதை உறுதிசெய்தல் வேண்டும்
குட்டி நாடுகள் எல்லாம் இம்மாபெரும் தேசத்திற்கு மத நல்லிணக்கத்திற்கு வழிகாட்டுகின்றன என்பதுதான் மகா ஆச்சரியம் , இதே நாடுகள்தான் 1991ல் பாபர் மசூதி இடிக்கபட்டபொழுது இந்திய பொருட்களை வாங்கமாட்டோம் என தடை எல்லாம் விதித்தன
நிச்சயம் இது மோடியின் வெற்றி அல்ல, மாறாக அந்நாடுகள் நாங்கள் எவ்வளவு பெருந்தன்மையாளர்கள் தெரியுமா? என ஒரு வகையில் மோடியினை சாட்டையால் அடித்திருக்கின்றன.
மாள வேண்டியது மதவெறி , வையகம் செழிக்க மானிடம் தழைக்க வாழ வேண்டியது மத நல்லிணக்கம் என அந்நாடு மிகப்பெரும் தத்துவத்தினை உலகிற்கு சொல்கின்றது, அபுதாபியின் செயல்பாட்டினை மானிட தர்மம் அறிந்த யாரும் வாழ்த்தாமல் இருக்க முடியாது
மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் இவற்றை எல்லாம் என்றொ செய்து வழிகாட்டிவிட்டன, கிழக்கின் அந்த பெரும் அதிசயக்கதக்க பெருந்தன்மை சித்தாந்தத்தை அரேபியாவும் ஏற்றுகொண்டிருப்பது மிக மிக பெருமைபடதக்க விஷயம்
இஸ்ரேல் கூட செய்யாத மசூதி இடிப்பு இன்னும் பல கலவரங்களின் சர்ச்சை கூட்டத்தின் தலைவரை அழைத்து , தங்கள் நாட்டில் இந்து ஆலயம் கட்டும் விழாவின் தொடக்க நாளில் அடிக்கல் நாட்ட செய்திருப்பது நிச்சயம் மதவெறி பிடித்த இந்துக்களின் மனதில் மானிட நேயத்தால் அடிக்கும் விஷயம், அபுதாபி அதனைத்தான் செய்திருக்கின்றது
ஆழயோசித்தால் அந்த உண்மை புலப்படும்.
நிச்சயம் அந்த அடிக்கல்நாட்டும் விழாவில் மோடிக்கு மனதிற்குள் வலித்திருக்கும், இனியாவது இங்கு மத நல்லிணக்கம் வளரட்டும்