சிறந்த எழுத்தாளரான முத்துகுமார் ஏன் இப்படி சறுக்கினார்?
ஆர்.முத்துகுமார் மீது எப்பொழுதும் மரியாதை உண்டு. அரசியல் வரலாறுகளை அவரை விட்டால் அட்டகாசமாக எழுத இங்கு யாருமில்லை
மிக துல்லியமான வரலாறுகள், எங்கிருந்தோ தொகுக்கபட்ட குறிப்புகள் என மனிதரின் உழைப்பு பாராட்டதக்கது
ஒரு புத்தகத்திற்கு அவர் உழைக்கும் உழைப்பு மிக மிக சிரமானது என்பது படிக்கும்பொழுது புரிகின்றது, அதிசயிக்கதக்க உழைப்பு
இப்பொழுது அவரின் திராவிட இயக்க வரலாறு இரண்டாம் பாகம் படித்துகொண்டிருக்கின்றேன், மனிதர் ஒரு இடத்தில் சறுக்கிவிட்டார்
ஆம், ராமசந்திரனின் தந்தையார் இலங்கை கண்டியில் மாஜிஸ்ரேட்டாக இருந்தார் என்கின்றார். அதுவும் எப்படியாம்? அவர் ஆசிரியராக இருந்து பின் மாஜிஸ்ரேட் ஆனாராம்
இது கிட்டதட்ட பெரும் சறுக்கல், காரணம் அந்த கோபால மேனன் போஸ்ட்மேனாக இருந்தார் என்பதுதான் பல ஆவணங்கள் கூறும் உண்மை. அதுவும் அக்காலத்தில் இலங்கையில் மலையாளிகள் ஆதிக்கம் இருந்தது, இன்று அரபு நாடுகளில் இருப்பது போல அன்று அங்கு இருந்தார்கள்
அப்படி பிழைக்க சென்ற அந்த கோபாலமேனனும் போஸ்ட்மேனாக பிரிட்டிஷ் அரசில் பணியாற்றினார் என்பது ஆவணம் சொல்வது
அதுவும் ஆசிரியராக இருந்து மாஜிஸ்ரேட் ஆனார் என்பது மிகுந்ந்த சர்ச்சைகுள்ளான வாக்கியம்
அக்கால மாஜிஸ்ரேட்டுகள் எல்லாம் பெரும்படிப்பு படிக்க வேண்டும், அதுவும் தனியாக படிக்க வேண்டும் சிலர் லண்டன் எல்லாம் சென்று படித்தார்கள்
இவர் கேரளாவின் மருதூர் கிராமத்தில் இருந்துகொண்டு மாஜிஸ்ரேட் ஆனாரா?
(ராமசந்திரனே தான் மலையாளி அல்ல, மன்றாடியார் பரம்பரை என என்னவெல்லாமோ சொன்னவர். அதாவது அவரே தன் பரம்பரை பற்றி முடிவுக்கு வராமல் இருந்தார்)
ஒரு மாஜிஸ்ரேட் குடும்பம் அவர் திடீரென இறந்தால் நடுரோட்டுக்கு வருமா? அதுவும் ஒண்ட வழியின்றி கும்பகோணம் வருமா? நடக்க வாய்பில்லை
ஒரு மாஜிஸ்ரேட்டின் மனைவி தன் பிள்ளைகளை நாடக கம்பெனிக்கு அனுப்பி இருப்பாளா?
நல்ல வேளையாக சத்தியபாமா மருத்துவர் என எழுத்தாளர் சொல்லவில்லை
மிக சிறந்த எழுத்தாளரான முத்துகுமார் ஏன் இப்படி சறுக்கினார்? என்னவோ நடந்திருக்கலாம் அல்லது அவர் கையாண்ட குறிப்பு புத்தகத்தில் குழப்பம் இருக்கலாம்
போகட்டும், ஆனால் கோபாலமேனன் போஸ்ட்மேனாக இருந்தார் என்பது உண்மை
யார் யாரோ 100 வயது வாழும் உலகில் அந்த கோபாலமேனனும் வாழ்ந்திருக்கலாம், அவர் அப்படி வாழ்ந்திருந்தால் ராமசந்திரன் ஏன் தமிழகம் வந்து, சினிமா வந்து அரசியலுக்கும் வரபோகின்றார்?
கண்டி மலையக தமிழரில் ஒருவராக இருந்து மறைந்திருப்பார், தமிழகமும் இவ்வளவு சீரழிவுகளை சந்தித்திருக்காது