ஆந்தராக்ஸ் பவுடர் இப்பொழுது விஷயமாகின்றது…

Image may contain: food

உலகம் புதுவித மிரட்டலுக்கு ஆளாகியிருக்கின்றது, இப்பொழுதெல்லாம் விஷ பவுடர் பார்சலில் அனுப்பி மிரட்டுகின்றார்கள், விஷயத்தில் சிக்கல் என்னவென்றால் யார் அனுப்புகின்றார்கள் என்பதே தெரியாது

அதாவது உலகின் மிக மலிவான ஆயுதம் விஷஆயுதங்கள். செலவு குறைவு பாதிப்பு மிக அதிகம்

உதாரணம் நகரின் மையத்தில் விஷவாயு குண்டை வெடிக்க செய்தால் நகரின் உயிர்கள் மட்டும் காலி மற்றபடி கட்டங்கள் எல்லாம் அப்படியே இருக்கும், குண்டூசி கூட பாதிக்கபடாது

அந்த விஷ ஆயுதங்களில் பலவகை உண்டு, இப்பொழுது பரவுவது விஷ பவுடர் வகை. இதனை படரவிட்டால் உடனே விஷ வைரஸ்கள் பரவும் அதுவும் மனித வாடை கிடைத்துவிட்டால் மிக வேகமாக பரவி கொன்றுவிடும்

இந்த வகை ஆந்தராக்ஸ் பவுடர் இப்பொழுது விஷயமாகின்றது, தபாலில் அனுப்புகின்றார்களாம். கடந்தவாரம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பபட்டது , திறந்த பணியாளர் மீது பவுடர் சிந்தபட்டு அவர் பாதிக்கபட்டு மருத்துவமனையில் இருக்கின்றார்

கொஞ்சம் பவுடர் ஏதோ ஆவணம் போலுள்ள பேப்பரில் மடித்து வைக்கபடுகின்றதாம், பிரித்தால் உடலில் கொட்டுகின்றதாம், அதன் பின் வைரஸ் விஸ்வரூபம் எடுக்கின்றதாம்

இப்பொழுது லண்டனுக்கு ஒரு பவுடர் உறை தபாலில் வந்திருக்கின்றதாம், அச்சம் பரவுகின்றது

முன்பு அல்கய்தா ஆப்கனில் அழிக்கபட்டபொழுது இதே அச்சத்தை பின்லேடன் கொடுத்தார் பின்பு அது தடுக்கபட்டது

இப்பொழுது யாரோ கிளம்புகின்றார்கள், அது ஐ.எஸ் அமைப்பு என செய்திகள் வருகின்றன‌

ஆனால் இம்மாதிரி விஷயங்களை ஒப்புகொள்வதில் வடகொரிய அதிபருக்கு அலாதி பிரியம், செய்தி அவரை சென்றடையவில்லை போலிருக்கின்றது இல்லாவிட்டால் “ஆமா, நான் தான் அனுப்பினேன், இப்போ என்ன சண்டையா வா போடுவோம், அணுகுண்டு வீசுவேன்..” என வந்து நிற்பார்

யார் அனுப்பினாலும் அவருக்கு கவலை இல்லை, பயமுறுத்துவது அவராக இருக்க வேண்டும் அவ்வளவுதான்

ஆக பவுடர் விஷயத்தில் உலகம் மகா கவனமாகின்றது

இப்படி ஒரு பவுடர் 1960 வாக்கில் தமிழகத்திற்கு கிடைத்திருந்தால் ஒரு நடிகர் இன்னொரு நடிகை மேக் அப் செட்டில் கலந்து வைத்திருக்கலாம், தமிழகம் உருப்பட்டிருக்கும்.

எதற்கும் விஜயதாரணி போன்றவர்கள் பவுடர் பூசும்பொழுது எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.