நாச்சியார் படத்தில் ஒரு வசனம்

நாச்சியார் படத்தில் ஒரு வசனம் வருகின்றதாம், “கோவில் என்றாலும் குப்பை மேடு என்றாலும் எங்களுக்கு ஒன்றுதான்” என ஜோதிகா சொல்வதாக வசனமாம்

அதாவது சட்டத்தின் முன் குற்றவாளியினை எங்கும் பிடிப்போம் எனும் அர்த்ததில் வரும் வசனமாம்

“இது இந்துக்களுக்கு எதிரானது, இந்துக்கள் உணர்வை புண்படுத்துகின்றது” என்றோரு கோஷ்டி கோர்ட்டுக்கு கிளம்புகின்றதாம்

இதெல்லாம் காஞ்சிபுரம் தேவநாதன் குருக்களும், சங்கராச்சாரியின் கூலிபடையும் பேசவேண்டிய டயலாக்குகள், பாலா படத்து ஜோதிகா பேசினால் விடுவார்களா? விடவே மாட்டார்கள்