மோடி வரலாறுகளை படிக்கட்டும்
நிச்சயம் காமராஜர் அப்பழுக்கற்றவர், நியாத்தின் திருவுருவம் ஆனால் எப்படி வீழ்ந்தார்?
திமுகவினை குறிவைத்து அவர் பெரும் பணக்காரர்கள் நிறுத்தினார், நடேச முதலியார், பரிசுத்த நாடார் போன்ற பெரும் பணமுதலைகளை அவர் தேர்தலில் அண்ணா, கலைஞருக்கு எதிராக நிறுத்தினார்
பணக்காரர்களின் செல்வாக்கு, பணம் எல்லாம் புகுந்து விளையாட விடுமா திமுக? ஒவ்வொரு அடியினையும் வோட்டாக மாற்றும் வித்தை தெரிந்த கூட்டம் அது
அனாசயமாக காமராஜர் பணக்கார பங்காளன் என புகுந்து விளையாடிற்று, அண்ணாவின் தோல்வியினை பணக்காரரின் வெற்றியாய் அழுது அனுதாபம் தேடிற்று
1967ல் தோற்றதும் காமராஜர் ஒப்புகொண்டார் . “நாம பணக்காரங்களுக்கு ஆதரவான கட்சின்னு ஜனங்க நினைச்சிட்டாங்க, சூழ்நிலையும் அதுக்கு காரணமாயிற்று இதுதான் நாம் தோற்றதற்கு முதல் காரணம்”
இது யாருக்கு நினைவுக்கு வரவேண்டுமோ இல்லையோ மோடிக்கு நினைவுக்கு வரவேண்டும்
உபியில் கோட்டை கட்டி ஆண்ட காங்கிரஸ் சரிந்து போனதற்கு காரணம் இதே நிலமையே
மோடி பணக்காரர்களுக்கு சாதகமானவர் என்ற பெரும் பிம்பம் தொடர்ந்து விழுகின்றது , மிக கடுமையான நிலைப்பாடு எடுத்து அவர் அந்த பிம்பத்தை உடைக்காவிட்டால் அடுத்த தேர்தலில் அவர் நினைத்த பலனை பெற முடியாது
மோடி வரலாறுகளை படிக்கட்டும்