ராமசந்திரனை எம்.ஆர் ராதா சுட்ட சம்பவம்

இந்தியாவின் பரபரப்பான சம்பவங்கள் என வாசித்துகொண்டிருந்தால் அதில் ராமசந்திரனை எம்.ஆர் ராதா சுட்ட சம்பவமும் வருகின்றது

ராமசந்திரன் சுடபட்டவுடன் தமிழகம் மிக பரப்பாகியிருக்கின்றது, ரசிகர்கள் அவர்களின் கடவுள் சாக போகின்றான் என பெரும் அழிச்சாட்டியத்தில் இறங்கி இருக்கின்றன‌

இது அன்றைய தேர்தல் பிரச்சாரத்திலும் எதிரொலித்திருக்கின்றது, ராமசந்திரன் தனிபட்ட விஷயத்திற்காக சுடபட்டிருக்கின்றார் என்கின்றார் காமராஜர்

திமுக இதயகனி சுடபட்டிருக்கின்றது என அழுகின்றது

ஒரு குரல் மட்டும் உரக்க உண்மையினை சொல்லியிருக்கின்றது, அது பெரியார் குரல் ” இரு கூத்தாடிகள் ஒருவரை ஒருவர் சுட்டுகொண்ட விஷயத்திற்காக தமிழகம் பெரும் கலவரகாடு போல ஆகியிருப்பது நிச்சயம் நல்ல விஷயம் அல்ல‌

சினிமாக்கார கூத்தாடி பயல்களுக்குள் ஏதோ தகறாது, இதற்கு ஏன் ஏதோ பெரும் சிந்தனைவாதி தாக்கபட்டது போல , இந்நாட்டிற்கு ஏதோ ஆபத்து வந்தது போல இந்த தமிழர்கள் உணர்ச்சிவசபட்டு பொங்குவது தமிழக மக்கள் மனநிலை மிக மோசமாக செல்கின்றது என்பதற்கு அடையாளம், இது மிக ஆபத்தும் அசிங்கமுமானது”

இப்படி ராமசந்திரன் சுடபட்ட காலத்தில் என்ன நடந்திருக்கின்றது?

ஒரு பட அதிபர் விவகாரம் தொடர்பாக ராதாவும் ராமசந்திரனும் தனி அறையில் விவாதிக்கின்றார்கள், திடீரென வெடி சத்தமும் அலறல் சத்தமும் கேட்கின்றது

என்னாச்சி என ஓடி வருகின்றார்கள் ஆட்கள், “சுட்டாச்சி.. சுட்டாச்சி” என அசால்ட்டாக வெளிவந்தார் ராதா

அதன் பின் ராமசந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு பிழைக்க வைக்கபட்டு, பின் பேச்சு பயிற்சி கொடுக்கபட்டு அதன் பின் தமிழகம் நாசமாக்கபட்டதெல்லாம் யாவரும் அறிந்தது

இக்கதையில் ஒரு இடைச்செருகல் உண்டு

அதாவது தன்னைதானே சுட்டுகொண்ட ராதாவினை காப்பாற்றும்படி தன் உதவியாளரிடம் சொன்னாராம் ராமசந்திரன், அவ்வளவு நல்லவராம்

அவர் நல்லவராக இருக்கட்டும், சுடபட்டு பேச முடியா நிலையில் மயங்கி கிடந்தார் ராமசந்திரன், அவருக்கு பேச்சு வந்ததே மருத்துவமனையில் பலநாட்கள் கழித்து

அவர் எப்படி ஸ்பாட்டில் “ராதா அண்ணனை காப்பாற்றுங்கள்” என சொல்லியிருப்பார்? நிச்சயம் முடியாது

ஆக இந்த ராமசந்திரன் சம்பந்தபட்ட கட்டுரைகள், சம்பவங்கள் எல்லாம் எக்ஸ்ட்ரா கட்டுகதைகளாலும் அநியாய பொய்களாலும் நிரம்பியது என்பது புரிகின்றது

அக்கால அப்பாவிகள் இதனை படித்து கண்ணீர் சிந்தியிருக்கலாம், இக்கால தலைமுறை படித்து பார்த்து சிரித்துகொண்டிருக்கின்றது

இப்படி எல்லாமா கதை கட்டுவார்கள்? தன்னைபற்றி மிக அதிகமாக அள்ளிவிட்டு பொய்யாக எழுதியதையுமா ஒரு மனிதன் ரசிப்பான்?