மோடியால் இணைந்தோம் , தமிழக அமைச்சர்கள் ஒப்புதல்
மோடியால் இணைந்தோம் , தமிழக அமைச்சர்கள் ஒப்புதல்
பன்னீரும், அமைச்சர்களும் தங்களை அறியாமல் பெரும் அவமானத்திற்கும் பழிக்கும் தயாராகின்றார்கள்
அதாவது இவர்களின் உட்கட்சி தகறாறு வரை மோடி வந்து தீர்த்திருகின்றார் என்பதை ஒப்புகொள்கின்றார்கள், அந்த அளவு அதாவது சாலையோரத்தில் ஒன்றாக டீ குடிக்கும் அளவு நெருக்கம் இருப்பதாக சொல்கின்றார்கள்
ஆனால் அதே நெருக்கத்தை காவேரி மீட்பு, மீணவர் பிரச்சினை, புயல் மீட்பு பணிகளில் எல்லாம் தமிழக அமைச்சரவை காட்டி தமிழகத்திற்கு நியாயம் பெற்று தந்தால் என்ன? என பொங்கினால் இவர்களும் தாங்கமாட்டார்கள்
மோடியும் தாங்கமாட்டார்
முட்டாளுக்கு உதவாதே என்பது பழமொழி, அந்த தவறை செய்துவிட்டு இனி மோடி படும்பாடு கொஞ்சமல்ல
இனி எந்த பிரச்சினை என்றாலும் அன்று பன்னீருக்கும் பழனிச்சாமிக்கும் தூது போன மோடியே, இலங்கைக்கு ஏன் தூது போகவில்லை, கன்னடத்திற்கு ஏன் தூது போகவில்லை என ஆளாளுக்கு கிளம்புவார்கள், பொறுத்திருந்து பாருங்கள்