அம்பானிக்கும் அதானிக்கும் இன்று நீரவ் மோடிக்கு வந்த நெருக்கடி நிச்சயம் வரும்

No automatic alt text available.

ஒரு சர்ச்சை நடந்துவிட்டால் இந்தியாவில் ஆளாளுக்கு பரபரப்பாய் எழுதுவார்கள், முன்பு பத்திரிகைகள் அப்படி எழுதி தள்ளும், அவர்கள் கற்பனை சிறகினை தட்டிவிட்டு எழுதுவார்கள்

இணையம் வந்தபின் எல்லோரும் எழுத ஆரம்பித்தாயிற்று, சிலர் வங்கி நடைமுறையினை புரியாத மொழியில் விளக்கி தள்ளுகின்றார்கள், சிலர் நகைகடை விவகாரங்களை சொல்கின்றார்கள், சிலரோ நேராக கோல் போஸ்ட் சென்று மோடி ஒழிக, காங்கிரஸ் ஒழிக என எழுதி தள்ளுகின்றார்கள்

என்ன நடந்திருகின்றது?

நீரவ் மோடி வைரமும் இன்னபிற கற்களும் வாங்கி விற்கும் வியாபாரி, அவர் வெளிநாட்டில் வாங்கும் வைரத்திற்கு சினிமா பாணியில் சூட்கேஸில் கொடுக்க முடியாது

கச்சா வைரம் வாங்க, வாங்கி பாதுகாப்பாக கொண்டுவர என ஏகபட்ட செலவு பிடிக்கும் விஷ்யங்களுக்கு இந்தியாவில் ஒரு வங்கி இவர் பணத்திற்கு நாங்கள் பொறுப்பு என கடிதம் கொடுக்கும்

பின் அந்த பணத்தை வங்கிகொடுத்துவிட்டு இவரிடம் இருந்து 90 நாளுக்குள் வசூலிக்கும் , இது எல்லா பெரிய நகைவியாபாரிகளும் செய்யும் நடைமுறை

நீரவ் மோடி எதில் சிக்கினார் என்றால் வங்கி இப்படி ஒரு கடிதம் கொடுக்க வேண்டும் அல்லவா? அதனை வங்கி மேலதிகாரி ஒப்புதலின்றி தனக்கு தெரிந்த வங்கி ஊழியர் மூலம் பொய்யாக தயாரித்து வெளிநாட்டு பார்ட்டிகளை நம்ப வைத்திருக்கின்றார்

வங்கி கடிதம் கொடுத்துவிட்டது என சந்தேகபடாத வெளிநாட்டு வங்கிகள் தாரளாமாய் அனுப்பியிருக்கின்றன‌

இதில் தன் பஞ்சாப் வங்கி கடனை கட்டிவிட்டு நகை விற்று தன் தொழிலை தொடர்ந்து, இதே பண சுழற்சி முறையினை செய்திருக்கின்றார்

அதாவது ஒரு கடன் வாங்கி இன்னொரு கடன் அடைப்பது என விளையாடிகொண்டே இருந்திருக்கின்றார், அவர் எவ்வளவு கடன்பெறவும் பஞ்சாப் வங்கி ஊழியர்கள் இவருக்கு நாங்கள் ஜாமீன் என்பது போல பிண்ணணியாக இருந்துள்ளனர்

அதாவது பஞ்சாப் வங்கியின் சில ஊழியர்களை கையில் வைத்து கொண்டு வங்கி ஒப்புகொண்டது போல் மோசடி செய்து ஆடியிருக்கின்றார்

ஒரு கட்டத்தில் இதற்கான கண்காணிப்புகளை செய்ய்யும் அமைப்புகளுக்குள்ளே பஞ்சாப் வங்கி ஊழியர் மூலம் நுழைந்திருக்கின்றார்

இந்த மோசடி பண சுழற்சி 7 ஆண்டுகளாக நடந்திருக்கின்றது, பணம் ஏதும் அவர் அப்பொழுது சுருட்டவில்லை மாறாக மோசடி பணசுழற்சி செய்து கொண்டே இருந்திருக்கின்றார்

சிக்கல் எங்கு வந்தது என்றால் நீரவ் மோடிக்கு விசுவாசமான அதிகாரி ரிட்டையர்டு ஆகி புது அதிகாரி வந்தபின் வந்திருக்கின்றது

நீரவ் மோடி மட்டுமல்ல, இன்னும் ஏராளமானோர் இப்படி மோசடி செய்திருக்கலாம் என்கின்றார்கள். அப்படியாக 11, 800 கோடிக்கு மோசடி கடிதம் கொடுக்கபட்டு பணம் சுரண்டபட்டிருக்கின்றது என்பது விசாரணையில் தெரிகின்றது

இதில் நீரவ் மோடியின் மோசடி 500 கோடி வரை இருக்கலாம், மீதி யாரெல்லாம் ஏமாற்றினார்கள் எனும் விசாரணை நடக்கின்றது

இதே பாணியில் வேறு வங்கியிலும் ஏமாற்றி இருக்கலாம் என அந்த விசாரணையும் நடக்கின்றது

ஆக இந்த சர்சைகளுக்கு முதல் காரணம் வங்கிகளின் கவனகுறைவும், மோசடி ஊழியர்களும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கின்றது

ஆக தனக்கு விசுவாசமான அதிகாரி பதவி இழந்ததால் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கின்றார் நீரவ் மோடி, அதன் பின்பே அவர் செய்த அனைத்து மோசடிகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன‌

அம்பானி, அதானிக்கும் இப்படி ஒரு அரசு அதிகாரி இருக்கின்றார், அவர் பெயர் நரேந்திர மோடி, பாரத பிரதமராக பணியாற்றிகொண்டிருக்கின்றார் ,குஜராத் முதல்வராக அவர் இருந்தபொழுதும் கடும் பணி ஆற்றியிருக்கின்றார்,

அதனால்தான் குஜராத்தில் பாஜக அரசு மாற கூடாது என்பதில் அம்பானி குடும்பம் குறியாக இருக்கின்றது

ஆனால் இந்திய பிரதமராக‌ மோடி அடுத்தமுறை அமர்வது பெரும் சிக்கல் நிறைந்த விஷயம்

இனி பிரதமர் மோடி பதவி இழக்கும் நாட்களில் அம்பானிக்கும் அதானிக்கும் இன்று நீரவ் மோடிக்கு வந்த நெருக்கடி நிச்சயம் வரும்