கமல் உளற ஆரம்பித்துவிட்டார், அதாவது அரசியல்வாதியாகிவிட்டார்

கமலஹாசன் அரசியல்வாதி ஆகிவிட்டபடியால் பேட்டிகளில் இறங்கிவிட்டார், இப்பொழுது தினதந்திக்கு பேட்டி அளித்துள்ளார்

மாவட்டம் தோறும் மிக பின் தங்கிய கிராமத்தை தத்தெடுத்து மார்டன் கிராமமாக வளர்ப்பாராம். இன்னும் என்னவெல்லாமோ பேசுகின்றார்

மனிதர் “உன்னால் முடியும் தம்பி” எனும் சினிமாபாணியிலே இருப்பார் போலிருக்கின்றது

தமிழக அரசு கடனை எப்படி அடைப்பீர்கள் என்றால் தொழிற்துறையினை வளர்ப்பாராம், லஞ்சத்தை கட்டுபடுத்துவாராம்

மறந்தும் முறையாக வசூலிப்பேன் என்றோ, வரி செலுத்தா முதலாளிகளை பிடிப்பேன் என்றோ, மணல் முதல் குவாரி வரை கொள்ளையடிய்யோரை முடக்குவேன் என்றோ ஒருவார்த்தை கூட இல்லை

இதற்கு முன் ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்களிடம் இருந்து பறிப்பேன் என்ற வாக்கியமுமில்லை, அரசுக்கு வரவேண்டிய சொத்துக்களை பதுக்கியவரிடமிருந்து மீட்டாலே போதும் என்ற செய்தியுமில்லை

சம்பந்தமே இன்றி பல பதில்களை சொல்லிகொண்டிருக்கின்றார்

ஆக கமல் உளற ஆரம்பித்துவிட்டார், அதாவது அரசியல்வாதியாகிவிட்டார்

தமிழிசை, எச்.ராசா, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் வரிசையில் கமலஹாசனும் இடம்பெற்றாயிற்று


எதற்கு? வழக்கு இன்னொரு முறை 20 வருடம் நடந்து அதன் பின் தமிழக உரிமை 150 டி.எம்.சி என சுருங்கவா?

இந்த மனிதர் கன்னடத்தின் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ?