தன் வினை தன்னை சுடும் : பாஜக அரசுக்கு மிக சரியாக பொருந்துகின்றது

No automatic alt text available.

தன் வினை தன்னை சுடும் என்பார்கள், அது பாஜக அரசுக்கு மிக சரியாக பொருந்துகின்றது

அதாகபட்டது சில விஷயங்களை ராமர் பாலம் போல அழிச்சாட்டியம் செய்யும் அக்கூட்டத்திற்கு அதனை போலவே ஒரு விஷயம் எதிர்ப்பாகின்றது

விஷயம் இதுதான்

கொழும்பு துறைமுகத்தை நொறுக்கும் வகையில் கன்னியாகுமரி பக்கம் பெரும் துறைமுகம் அமைக்கும் திட்டத்தில் இறங்கியது இந்தியா, நிச்சயம் குளச்சல் பக்கம்தன் அதற்கு மிக தோதான பகுதி

ஆனால் குளச்சல், இணையம் என மீணவ எதிர்ப்பால் பின்வாங்கியவர்கள் அதன் பின் முப்போகம் விளையும் பகுதிக்கு வந்தாயிற்று அங்குதான் சிக்கல்

விவசாய சிக்கலா என்றால் இல்லை மாறாக மகா புனிதமான அய்யா வைகுண்டர் திருக்கோவில்கள் அமைந்துள்ள கடற்கரை அது

அய்யா வைகுண்டர் தோள்சீலை போராட்டம் நடத்தும் முன்னால் ஞானம் பெற கடலில் குதித்ததும், பின் அவர் போராட்டம் முடித்து பெரும் அவதாரமாக ஒப்புகொள்ளபட்ட காலங்களில் அவர் போதித்த இடமும் அவைகள்

கடலில் மூழ்கி கிடக்கும் துவாரகை பதி ஓரு காலத்தில் மேலெழும்பும் என அவர் தீர்க்கதிர்சனமும் உரைத்திருக்கின்றார்

அய்யா வைகுண்டர் தென்னக இந்துக்களின் மாபெரும் கடவுள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

நிச்சயம் அவர் நாராயணின் அவதாரம், அவரின் ஆற்றலும் போதனையும், சாதனையும் அதனை நிரூபிக்கின்றன‌

ஆனால் சாதி, தமிழக அவதாரங்களை வடநாட்டு பிரமணர்கள் ஒதுக்கி வைத்தல் போன்ற விஷயங்களால் அவர் ராமர், கண்ணன் அளவு பிரபலமாகவில்லை

“எங்கெல்லாம் அநீதி தலைவிரித்தாடுமோ அங்கெல்லாம் அவதரிப்பேன்” என சொன்ன பரம்பொருளின் வாக்கிற்கேற்ப தென்னகம் திருவிதாங்கூர் மன்னன், கிறிஸ்தவ கும்பல் அழிச்சாட்டியம் என மகா கொடுமை இருந்த காலத்தில் அவதரித்தவர்

ராமர், கண்ணன் வரிசையில் அமரும் அவதாரம் அய்யா வைகுண்டர் , ஒரு துளி சந்தேகமில்லை

அந்த மாபெரும் அவதாரத்தின் புண்ணிய பூமியிலா துறைமுகம் அமைப்பீர்கள் என பொங்குகின்றது கன்னியாகுமரி இந்து அமைப்புகள்

இது மாபெரும் சிக்கலான விஷயம், மத்திய அரசு அந்த இடத்தை விட்டுவிடுவது நல்லது

காரணம் அய்யா வைகுண்டர் இந்துக்கள் மட்டுமன்றி, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என எல்லோருமே ஒருங்கே போற்றும் மகான், அவர் தொடங்கி வைத்த பதிகளை துறைமுகம் என முடக்குவது நிச்சயம் பெரும் சிக்கலை உருவாக்கும்

ராமர் பாலத்தினை சொல்லி சேது கால்வாயினை மூட வைத்தார்கள், ராமர் என்றவுடன் இந்தியாவே கொந்தளித்தது

அந்த நிலைக்கு அய்யா வைகுண்டருக்க்கு ஏன் வட இந்தியா பொங்கவில்லை என்றால் அங்கேதான் திராவிட, தமிழ், சாதி போன்ற பல விஷயங்களை சந்தேகிக்க வேண்டும்

உண்மை அப்படித்தான் இருக்கின்றது, இந்துக்களின் கடவுள்கள் வடநாட்டில் மட்டும்தான் வருவார்கள், தென்னாட்டில் அப்படி வரமுடியாது வந்தாலும் ஏற்றுகொள்ளமாட்டோம் எனும் ஒருவித மகோமத நிலையில் இருப்பார்கள் போலிருக்கின்றது

பிராமண பீடம் அங்கீகரிக்காத தாழ்ந்த சாதி அவதாரம் இந்துவாய் இருக்க முடியாது என்ற மகோன்னத மனநிலையில் அவர்கள் இருந்தாலன்றி இந்த தாழ்வு நோக்கம் சாத்தியமில்லை

எப்படி ஆயினும் அய்யா வைகுண்டரின் பதிகளை தொட தென்னகத்தார் விடமாட்டார்கள்,

வட நாட்டார் ஒப்பாவிட்டாலும், பிராமணர் அங்கீகரிக்காவிட்டாலும் அய்யா வைகுண்டர் நாராயணின் அவதாரமே.

ராமருக்கு ஒரு நீதி அய்யா வைகுண்டருக்கு ஒரு நீதி என விடமுடியாது

தன் ஆயுதம் தனக்கு எதிராக திரும்புவதை கண்டு திகைக்கின்றது பாஜக கோஷ்டி

எப்படி ஆயினும் அய்யா வைகுண்டர் பதிகள் எல்லாம் ஆன்மீகம், சமூக நீதி போன்றவற்றிற்கு எல்லாம் பெரும் எடுத்துகாட்டான விஷயங்கள்

அவைகள் காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டியதால் மத்திய அரசு வேறு இடம் பார்ப்பதே நல்லது,

(தாமரை இந்தியாவினை ஆளும் என எப்பொழுதோ சொல்லி செனறவர் அவர், தாமரை மூலம் இந்துக்களுக்கு எழுச்சி வரும் என எண்ணியோ என்னமோ தன் அடையாளமாக தாமரை ஜோதியினை வைத்திருந்தார்

மகா ஆச்சரியமான கணிப்பு இது, அந்த அவதார திருவிடத்தையா தாமரையினை சுமந்து வரும் பாஜக அரசு இடிக்க போகின்றது? )