தலைவிக்காக பிரார்த்தனை….

Image may contain: 1 person, smiling, sitting

ஜெயா இருந்தவரை சில கேரள மாந்திரீகர்களை , ஜோதிடர்களை கேட்காமல் ஏதும் செய்ததில்லை, பல நேரங்களில் அவர்கள் கணிப்பு சரியானது.

சில இடங்களின் அவர்கள் உண்மையினை மறைத்திருக்கலாம், “அம்மா நீங்கள் பிரதமர் ஆக முடியாது” என்றாலோ “அப்பல்லோவில் அனாதையாக மரிப்பீர்கள்” என சொல்லியிருந்தாலோ, அமைதிபடை சத்தியராஜ் ஜோசியரை சுட்டது போல சுட்டிருப்பார்கள்

அதனால் ஜோதிடர்கள் உண்மையினை மறைத்திருக்கலம், ஆனால் கணித்திருப்பார்கள்

இப்பொழுது ஏன் ஜோதிடர்கள் நினைவு வருகிறதென்றால், இந்நினைவு நீதிபதி ஆருமுகசாமிக்கு வந்திருக்க வேண்டும், மருத்துவத்தை விட ஜெயா அதிகம் நம்பியது ஜாதகத்தையும், யாகத்தையும். அதனால் அந்த பணிக்கர், உன்னி போன்றவர்களை பிடித்து விசாரித்தால் சில தகவல்கள் அவருக்கு கிடைக்கலாம்

சங்கத்திற்கும் அந்த பணிக்கரை தேடும் அவசியம் வந்தாயிற்று, தலைவி வீட்டிற்கு என்னாயிற்று என உலகமே பரிதவிக்கும் நிலையில் அந்த பணிக்கரை பிடித்து சோளி உருட்டி பார்க்க வேண்டும், தலைவி வீடு முதல் கார் டயர் வரை வாஸ்து சரியாக இருக்கின்றதா? என்பது முதல் என்ன யாகம் நடத்த வேண்டும் அதில் முயலை போட வேண்டுமா இல்லை திமிங்கலத்தை போடவேண்டுமா? என்பது வரை பல ஆலோசனை செய்யவேண்டியுள்ளது

அதனால் அந்த கேரள பணிக்கரை மிக தீவிரமாக சங்கம் வலைவீசி தேடிவருகின்றது.

தலைவி வீட்டில் எல்லோரும் சரியாக வேண்டுமென்று தினகரன் குழுமத்திற்கு ஜெப கோரிக்கை வைத்தது முதல் ரோமாபுரியில் திருப்பலி நிறைவேற்ற சொல்லி போப்பாண்டவருக்கு மெயில் வரை அனுப்பியாயிற்று

இன்று Periya Samy , Durai Dhurai Sathish போன்றவர்கள் தீ மிதிக்கும் விரதம் தொடங்குகின்றார்கள். Bilal Aliyar போன்றோர் கடும் பிரார்த்தனையில் இறங்கியாயிற்று.

Babu Rao கூட மண்சோறு உண்டதாக செய்திகள் சொல்கின்றன‌

இனி சர்வமத பிரார்த்தனையும் நடைபெறும், மகாத்மா காந்திக்கு பின் இந்தியாவில் ஒருவருக்கு சர்வமத பிரார்ததனை நடைபெற போகும் புகழை பெறுகின்றார் தலைவி

“ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினோம், இந்த குடும்பத்தை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினோம்” என்ற உருக்கமான பாடல் உலகெல்லாம் ஒலிக்கின்றது