ரஜினியின் 2.0 வெளியாவதில் தாமதம்

ரஜினியின் 2.0 வெளியாவதில் தாமதம் , டைரக்டர் மீது லைக்கா பட நிறுவனம் மனவருத்தம் : செய்தி

தன் சொந்தபடம் என்றால் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுப்பதும், அடுத்தவன் பணம் என்றால் அதில் ஆண்டு அனுபவித்து அவர் கனவினை எல்லாம் நிறைவேற்றி தயாரிப்பாளரை தெருவுக்கு இழுத்துவருவதில் சங்கருக்கு நிகர் அவரேதான்

கோடீஸ்வர அல்லிராஜா சுபாஷ்கரன் கிடைத்தால் விடுவாரா?

மாபெரும் கோடீஸ்வரனான சுபாஷ்கரனுக்கே வருத்தம் வந்தால் அதில் எத்தனை கோடிகள் செலவாயிருக்க வேண்டும்?

படம் எப்படி எல்லாம் ஓடினால் அது வசூலாகும்? ரஜினி முதல்வர் பதவி அல்ல, பிரதமர் பதவிக்கு நின்றால் அல்லவா சரியாகும்?

பொருத்து பாருங்கள், ரஜினி எப்படி எல்லாம் அரசியலில் சீறப்போகின்றார் என, எல்லாம் இந்த படம் வெளிவந்து ஓடும்வரை மட்டுமே என்பது வேறு விஷயம்.

சுபாஷ்கரன் செலவழித்த பணத்திற்கு ரஜினி ரசிகர்கள் நாயாக உழைக்க போகின்றார்கள், அந்தோ பரிதாபம்.

அது இருக்கட்டும், சங்கர் ஏன் இப்படி அல்லிராஜாவினை பழிவாங்குகின்றார்? அவர் ராஜபக்சேவின் கூட்டாளி என்றார்களே அதற்காக இருக்குமோ?

ஆக சங்கர் அங்கிள் சைமனின் ரகசிய கூட்டாளியாக இருக்கலாம்