பரிதாபத்திற்குரிய ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: 1 person, smiling, selfie and close-up

முதலில் எம்ஜிஆரும், அதனால் பலரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று

கலைஞரை எதிர்க்க ராமசந்திரன் கட்சி உருவாக்கபட்டு, அது எப்படியோ பெரும் கட்சியான உருவானபின் அதனை எங்கிருந்தோ வந்து சட்டென பிடித்தவர் ஜெயலலிதா

கொள்கை , கட்சியின் அடிப்படை சாசனம் என எதுவும் அவருக்கு தெரியாது. அவருக்கென்ன? ராமசந்திரனுக்கே தெரியாது, இதனால் ஒரு கொள்கையுமின்றி கலைஞரை எதிர்ப்பது ஒன்றே முழுநேர பணி என கட்சி நடத்தியவர்

உருப்படியான ஒரு மக்கள் நல போராட்டத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் நடத்தியதில்லை, அவ்வளவு ஏன் பிரச்சாரம் என்றாலும் ஒரு மகாராணி ஊர்வலம் வருவது போல் வருவாரே அன்றி மற்றபடி அவரை பார்க்க முடியாது

மக்கள் பார்க்கமுடியாதது வேறுவிஷயம், எம்.எல்.ஏக்களும் ஏன் பல இடங்களில் மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளுமே பார்க்கமுடியாது

பையனூர், ஐதரபாத், கொடநாடு என எங்காவது இருந்துகொண்டு ஏதோ பெரும் ராணி போல மக்களாட்சியினை நடத்தியவர் அவர்

அவரின் விதியும் தொடக்கத்தில் இருந்தே ஒத்துழைத்தது, ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது.

அதுவும் ராஜிவ் செத்து அந்த அனுதாபத்தில் அவர் முதல்வராகும் அளவிற்கு விதி அவருக்கு ஒத்துழைத்தது

அதன் பின்னும் அவரின் பிறவிபலன் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்துகொண்டே இருந்தது, கிட்டதட்ட மகாராணி ஸ்தானத்திற்கு உயர்ந்தார் ஜெயலலிதா

இல்லை உயர்த்தபட்டார்

ம் என்றால் சிறைவாசம் , ஏன் என்றால் வனவாசம் எனும் அளவிற்கு அவருக்கு காலம் அவரை சக்தியாக்கி வைத்திருந்தது

ஏராளமான சர்ச்சைகளுக்கு சொந்தகாரியானார், ஆனால் எந்த இடத்திலும் அதனை பற்றி பேசியதில்லை. நான் அப்படித்தான் என்பது போல அவரின் தோரணை இருந்தது.

அவர் யாரையும் தேடி சென்றதாக தெரியாது, எல்லோரும் அவரை தேடித்தான் சென்று வணங்கி நின்றார்கள், அப்படியும் காலம் இருந்தது

காலம் தமிழக மக்களின் அறியாமையில் அவருக்கு வாய்ப்பளித்தது

இப்படி எல்லாம் பெரும் உயரத்தில் பெரும் ராணிக்கு நிகரான வாழ்வினை வாழ்ந்தார் ஜெயா, பிரச்சாரத்திற்கு இந்த சிறிய தமிழகத்தில் ஹெலிகாப்டரில் பறந்த முதல் மற்றும் கடைசியான கட்சி தலைவி அவர்தான்.

தமிழரை எப்படி எல்லாமோ வளைத்து அல்லது வசீகரித்து வாக்கு வாங்க முடிந்த அவரால் தேசிய அரசியலில் வெல்ல முடியவில்லை, பல இடங்களில் அனுபவமின்றி சொதப்பினார், ஏராளமான இடங்களில் தேசிய அரசியல்வாதிகள் அவரை கண்டு ஓடினர்

தன் செல்வாக்கால் அகில இந்திய அளவில் வரமுடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது, தமிழகம் போல முழு இந்திய அரசியல்வாதியினையும் அவர் நினைத்தது அவரின் மாபெரும் தவறு

அவரை முதலிலே வீழ்த்த கலைஞருக்கு அதிக நேரம் ஆகியிருக்காது, ஆனால் ஜெயா அனுதாபம் தேடிவிட கூடாது என்பதில் வலுகவனமாக இருந்தார் கலைஞர்

ஜெயலலிதாவும் கலைஞர் தன்னோடு மோதவேண்டும், அந்த அனுதாபத்தில் வெல்ல வேண்டும் என்பதில் 1987 முதலே கவனமாயிருந்தார், கலைஞரோ இந்த நுட்பம் அறிந்து அமைதியானார்

ஆனால் 1989ல் கலைஞர் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வாசித்தபொழுது ஓடி சென்று பிடுங்கி கலவர சூழலை ஏற்படுத்தி என்னை திமுகவினர் கொல்லபார்க்கின்றார்கள் என்றெல்லாம் நாடகம் நடத்தினார், ஆனால் ஒரு அனுதாபமும் கிடைக்கவில்லை

ஆனால் ராஜிவின் கொலையில் காங்கிரசுக்கு கிடைக்கவேண்டிய அனுதாபத்தை எல்ல்லாம் அள்ளிகொண்டு பதவிக்கு வந்தார், அத்தோடு காங்கிரசையும் ஒதுக்கினார்

1996ல் கலைஞர் ஜெயாவின் பலவீனம் பார்த்து தொடுக்கபட்ட வழக்கில் பின்னாளில் ஜெயாவிற்கு தீரா சிக்கல் உருவானது. நிச்சயம் கலைஞரின் ராஜதந்திர நகர்வு அது

ஆனாலும் ஜெயா என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் அவர் வீதிக்கு வந்து என்னை பெண் என்றும் பாராமல், ஒரு பெண்ணாக இருந்து நான் படும் சிரமம் போன்ற அழுகுணி வரிகளை சொன்னவுடன் வாக்கு விழத்தான் செய்தது.

கலைஞரை காட்டி அரசியல் செய்தாரே தவிர கலைஞரின் சாதனை எதுவும் அவர் செய்யவுமில்லை, அதனை தொடர விரும்பியதுமில்லை

அவர் எதனை எல்லாம் செய்தாரோ அதனை எல்லாம் தலைகீழாக புரட்டி போட்டே அரசியல் செய்தார் மதுக்கடை தவிர,

கலைஞரை எதிர்த்தே வாழ்வங்கு வாழ்ந்துகொண்டுமிருந்தார்.

வாழ ஒரு காலம் உண்டென்றால் அடிவாங்க ஒரு காலம் உண்டல்லவா?

சொத்துகுவிப்பு வழக்கில் அவரால் தப்ப இயலவில்லை, குமாரசாமி வடிவில் விதி வெளியில் விட்டாலும், அவர் மகிழ்ச்சியடையவில்லை

பெரும் எண்ணிக்கை எம்பிக்களை பெற்று பிரதமராகிவிட்டால் தன் வழக்குகளை இந்திரா ஸ்டைலில் புதைத்துவிடலாம் எனும் கனவும் மோடி வடிவில் தகர்ந்தது

அதன்பின் ஜெயலலிதாவிடம் உற்சாகம் குறைந்தது, அதாவது அவர் ஜாதகம் தென்னிந்தியாவில் பலித்தது, வட இந்தியாவில் முடியவில்லை

தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வரானாலும் அவர் பெரும்பாலும் வெளிவரவில்லை, இந்நிலையில்தான் அவரின் எம்பி சசிகலா புஷ்பா என்னை ஜெயலலிதா அடித்தார் என பாராளுமன்றத்தில் அழுதார்

அதன் பின் காட்சிகள் மாறின, இதனை எதிர்பார்க்காத ஜெயலலிதா குழம்பினார், குழப்பத்திலே அப்பல்லோவில் அனுமதிகபட்டார்

அதன் பின் அப்பல்லோ டாக்டர்களை தவிர யாரும் ஜெயாவினை பார்க்கவில்லை, அவர்களுக்கு அடுத்து பார்த்தது லண்டன் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்

அங்கே வாழ்வு முடிந்து வெளிவந்தார் ஜெயா.

கட்சி ஆடியது, அவருக்கு பின் யார் என்ற குழப்பம் கட்சியில் ஒடிகொண்டிருக்கும் பொழுதே தீர்ப்பு வந்தது

அவர் கல்லறை இப்பொழுது ஒரு குற்றவாளியின் கல்லறை என அடையாளபடுத்தபடுகின்றது

அவர் நெடுநாள் சிறைவாசம் பெற்று, ஆட்சி நீங்கும் நிலைக்கும் அவர் விதி ஒப்புகொள்ளவில்லை, காப்பாற்றி இருக்கின்றது

ஜெயலலிதா எங்கும் தன் உணர்ச்சிகளை காட்டுபவர் அல்ல, கண்ணீரோ கத்தலோ பொதுஇடத்த்தில் அவரிடம் இருக்காது, எல்லா அவமானங்களையும், நக்கல்களையும் மனதில்தான் வாங்கிகொண்டிருப்பார்

எம்ஜிஆர் சமாதியில் அடித்து சத்தியம் செய்தார், கோபத்தில் சிரித்தார், ஒரு மாதிரி பேசினார் என எங்காவது ஜெயா வாழ்வில் பார்க்க முடியுமா?

அப்படியே பாறைபோல முகபாவம் இருக்கும், உதடுகள் மட்டும் அசையும்

மொத்தத்தில் கிட்டதட்ட 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலை ஆட்டுவிக்க அன்றொரு ஆன்மா இந்த பூமிக்கு வந்த நாள் இது

முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று, மற்றபடி ஒன்றுமில்லை

எம்.என் ராஜம் போல, சரோஜா தேவி போல, சச்சு போல ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கவேண்டிய ஜெயாவினை, இன்று மிஞ்சி போனால் கே.ஆர் விஜயா போல டிவி தொடர் நடிகையாக வாழ்ந்திருக்க வேண்டிய அவரை…

பெரும் மகாராணி ஆக்குவதற்கு தமிழக பாமர நிலை அப்படி ஒத்துழைத்திருக்கின்றது என்பதுதான் ஆச்சரியம்..

ஜெயாவின் பிறந்தநாளில் அவரை அல்ல, அவரை கொண்டாடிய தமிழக அறியாமையினைத்தான் நினைக்க வேண்டி இருக்கின்றது

இன்று அவருக்கு பிறந்த நாளாம்

கடி நாய் என்றாலும் காவல்நாய் என்றொரு பழமொழி தமிழில் உண்டு, நிச்சயம் ஜெயா பெரும் சர்ச்சைகுரியவர் சந்தேகமில்லை

ஆனால் அவர் இருந்தவரை பல குழப்பவாதிகள் வெளியே வரவே இல்லை. எச்.ராசாவோ இன்னும் பலரோ இருந்த இடம் தெரியவில்லை

பலர் மய்யமாக அலைந்தார்கள், கொஞ்சம் மூச்சு சத்தமாக விட்டாலே அவர் முறைத்த முறைப்பில் விஸ்வரூபமெல்லாம் யாரும் எடுக்கவில்லை, எல்லாம் வாமண அவதாரம் அல்லது லிட்டில் ஜாண் உருவத்தில் மாறி இருந்தார்கள்

ஜெயாவால் தமிழகத்தில் நிகழ்ந்த ஒரே நல்ல விஷயம் அதுதான்

இன்று அவர் இல்லை , ஆளாளுக்கு பேசி அழிச்சாட்டியம் செய்வது ஒருபுறம், திடீரென பேச தொடங்கிய பிறவி ஊமைகள் போல அவர் கட்சியினர் ஒருபுறம்

ஆளாளுக்கு கட்சி தொடங்கும் இம்சைகள் ஒருபுறம், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கபடாத பிரதமராக சுற்றும் ஆளுநர் ஒருபுறம் என தமிழகம் மாபெரும் குழப்பத்தில் இருக்கின்றது

இம்மாதிரி இடங்களில் அவரை நினைக்கத்தான் வேண்டி இருக்கின்றது

ராமசந்திரனிடம் கேட்டார்கள், உங்களுக்கு பின் அதிமுக என்னாகும்? தமிழ்நாட்டு நலனோ, அதன் எதிர்காலமோ பற்றி கொஞ்சமும் கவலை இல்லா ராமசந்திரன் சொன்னார் “நிச்சயம் பிரளயம்”

இத்தனை லட்சம் மக்கள் பின்பற்றும் கட்சி தலைவர் இல்லாவிட்டால் என்னாகும்? மாநிலம் என்னாகும்? மாநில உரிமைகளை டெல்லி காலில் போட்டு நசுக்குமே? அண்ணாவின் போராட்டம் வீணாகுமே என்றேல்லாம் அவர் யோசிக்கவில்லை, அவருக்கு ஏது அவ்வளவு சிந்தனை?

நிச்சயம் அவருக்கு பின் பெரும் குழப்பம் அதிமுகவின் பெயரால் இங்கு நடந்து பெரும் அழிவு நடந்திருக்க வேண்டும், ஜெயா அதனை அடக்கி கிட்டதட்ட 30 வருட காலம் அமைதியாக தமிழகத்தை கொண்டு சென்றார்

அவரால் விளைந்த நல்ல விஷயம் அது

இன்று ராமசந்திரன் சொன்ன அதே பிரளயம் வெடித்திருக்கின்றது , இனி காப்பாற்ற யாருமில்லை எல்லாம் சர்வ நாசம், இன்னும் மகா மோசமாகும்

இன்று அவரின் பிறந்த நாள் என கொண்டாடுகின்றார்களாம், நாளையே ஆட்சி மாறினால் அவரை யாரும் நினைக்கபோவதில்லை என்பதே நிஜம்

அவரின் வாழ்வினை படித்தால் கொஞ்சம் பரிதாபமும் வரும், சினிமாவும் அரசியலும் அவர் விரும்பிய துறை அல்ல, சாதரண அமைதியான குடும்ப வாழ்வினையே அவர் விரும்பியிருக்கின்றார்

முதலில் அன்னை, சினிமா, பின் ராமசந்திரன் என திசைமாறிய வாழ்வு பின் சசிகலாவிடம் சிக்கி அதில் முடிந்தும் போனது

ஒரு நொடி கூட அவர் தனக்கான வாழ்வை வாழ்ந்த்தே இல்லை, எல்லாமே அவருக்கு திணிக்கபட்டது. பல இடங்களில் அவர் மிக கடுமையாக நடந்தது இந்த மனவெறுப்பில்தான்

அந்த பரிதாபத்திற்குரிய ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். இன்னொருமுறை அவர் பிறக்காமலே போகட்டும்