முதியோர் இல்லங்கள் பணஆசையில் நடத்தபடும் வியாபாரங்கள்
பல முதியோர் இல்லங்கள் பணஆசையில் நடத்தபடும் வியாபாரங்கள், அதில் முதியோர்கள் பணம் கறக்கும் பொருள் என்றுதான் இதுவரை கேள்விபட்டிருக்கின்றோம்
கவனிக்கவில்லை, உணவு கொடுக்கவில்லை என்றுதான் புகார்களும் பல சர்ச்சைகளும் வருமே தவிர இப்படி ஒரு கொடூர குற்றசாட்டு வரவில்லை
தமிழகத்தில் முன்பு காஞ்சிபுரத்தை கோவில் நகரம் என்பார்கள் , பட்டு நகரம் என்பார்கள், அண்ணா காலம் வரை அந்த நற்பெயர் இருந்தது
இப்பொழுதெல்லாம் பெரும் ரவுடிகள் அங்கிருந்துதான் வருகின்றார்கள், மானிட குலம் அஞ்சும் அளவு மகா கொடூர சம்பவங்கள் அங்குதான் நடக்கின்றன, கோவில் கொலைகளும் இன்னபிற கொடுமைகளும் நடக்கின்றன
அந்த காஞ்சிபுரம் பகுதியில்தான் ஹிட்லர் கூட செய்ய துணியாத மகா அகோரங்களும், மானிட குலமே நாணி காரி துப்பும் நிகழ்வுகளும் நடப்பதாக செய்திகள் வருகின்றன
இது உண்மையெனில் அகில உலகமே காரிதுப்பும், ஐஎஸ் இயக்கம் கூட கண்ணீர் விடும்
ஆம், முதியோர் இல்லம் என்ற பெயரில் காஞ்சிபுரம் பாலேஸ்வரம் அல்லது பல்லேஸ்வரம் எனும் பகுதியிலுள்ள இல்லத்திலிருந்து முதியோர்களை கொன்று உள் உறுப்புகளை விற்கின்றார்கள் எனும் பெரும் குற்றசாட்டு உலகினயே அதிர வைக்கின்றது
முதியவர் சேர்க்கை, மரண விவரம், மரண காரணம் என எதுவுமே சொல்லபட்டாமல் இந்த புலன் விசாரணை படத்தில் வருவது போல மகா மகா கொடூரங்கள் நடந்திருக்கின்றன என்கின்றார்கள்
இதனை கேள்விபட்டதிலிருந்து மனம் ஒரு நிலைப்படவில்லை, மோசமான தைமுர், செங்கிஸ்கான், ஹிட்லர், ராஜபக்சே காலத்தை விடவா கொடூரமானவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்?
எவ்வளவு பெரும் கொடுமையும், பணத்திற்காக மானிட கசாப்புகடை நடத்தும் கொடூரமுமா தமிழ்நாட்டில் நடக்கின்றது?
இதனை அரசு உடனே விசாரித்து நடவடிக்கை எடுத்து மீதி இருக்கும் முதியவர்களையாவது காப்பாற்ற வேண்டும்
இலவச ஸ்கூட்டியினை விட, இந்த மானிட கசாப்பு கடையின் மீதான நடவடிக்கை முதன்மையானது
மாட்டுக்காக அழும் தேசத்தில் மானிடனின் உடலை பாகம் போட்டு விற்பதை கண்டிக்க யாருமில்லையா?
மாட்டைவிடவா ஆதரவற்ற முதியவன் இத்தேசத்தில் மோசமாகிவிட்டான்???
இது இந்த தேசத்திற்கே அகில உலகரங்கில் மாபெரும் தலைகுனிவு. மத்திய அரசாவது உடனே களத்தில் இறங்கட்டும்
ஊரெல்லாம் சுற்றும் ஆளுநர் உடனே செல்லவேண்டிய இடம், இந்த மானிட பாகம் கிடைக்கும் கசாப்புகடை