காஞ்சிபுர முதியோர் இல்லம் …
அந்த காஞ்சிபுர முதியோர் இல்லம் பற்றி எழுதினால் அது கிறிஸ்தவ இல்லம் அதனால் நீ மறைத்துவிட்டாய் என்கின்றார்கள், மறைக்க விரும்பினால் அந்த சம்பவத்தையே தொட்டிருக்க வேண்டாம்
அக்கால மிஷினரிகள் நோக்கம் உன்னதமாக இருந்தது, பல கல்லூரிகளும் முல்லைபெரியாறு போன்ற அணைகளும், வேலூர் மருத்துவனை போன்றவைகளும் கிடைத்தன
இப்பொழுது 1 மிஷினரி உண்மை என்றால், 99 மிஷினரிகள் போலி என்பது ஒன்றும் ரகசியமல்ல. இந்த மோசடியில் பலரகம் உண்டு
நெல்லுக்கு பாயும் நீர் தனக்கும் பாயட்டும் என்பது போல அனாதை இல்லம் ஒன்றை நடத்தி தனக்கு ஒருபக்கம் சுருட்டும் ஒரு கூட்டம், இது மிக அதிகம்
கிறிஸ்துவத்தை பரப்புகின்றேன் என சொல்லி வெளிநாட்டு நிதிபெற்று இங்கு தன் சொத்துக்களை பரப்பி கூடவே இந்தியா கிறிஸ்தவருக்கு எதிரான நாடு எனும் கருத்தை ஐரோப்பாவில் பரப்புவது ஒரு கூட்டம்
இன்னொரு கூட்டம் எதற்கு பணம் தருகின்றார்கள் என தெரியாமல் வாங்கிகொள்ளும், எங்கிருந்தோ கட்டளைகள் வந்து அந்த திட்டத்தை எதிர்த்து போராடு, கூட்டம் சேர்த்து 4 பேரை கொல்லு என உத்தரவு வந்தவுடன் களமிறங்கும்
இன்னொரு கூட்டம் மகா ஆபத்தானது, அவர்களை அடையாளம் காண்பதும் மகா சிரமம். எங்கு எப்படி ஊடுருவுகின்றார்கள் என்பதே தெரியாது, ஆனால் ஊடுருவி சாதிபார்கள்
ஆம் அந்நிய சக்திகளின் உளவுதுறை இயக்கும் சில இயக்கங்களும் உண்டு, அது மகா ஆபத்தானது , ரத்த சோதனை செய்கின்றோம் என ஊடுருவி பாகிஸ்தானில் பின்லேடனை அப்படித்தான் கண்டறிந்தார்கள், உலகெல்லாம் உளவுபடைகளின் பெரும் ஆயுதம் இம்மாதிரி நிறுவணங்கள்
மிகசிறந்த உதாரணம் ஈழத்து சுனாமி, உண்மையில் புலிகளை ஒழித்தது ராஜபக்சே, சீனா, அமெரிக்கா எல்லாம் அல்ல, சுனாமி அவர்களின் கடல்பலத்தை நொறுக்கி தள்ளியது, ஆனால் புலிகள் வெளிசொல்லவில்லை சொன்னால் சிங்களம் கடும் உற்சாகம் ஆகும், பயம் போகும்.
சுனாமி வந்ததும் வெளிநாட்டு மீட்புகுழுக்கள் வந்தன, அதில் வந்த சில ஒற்றர்கள் புலிகளின் நிலையினை மிக சரியாக கண்டறிந்து போட வேண்டிய இடத்தில் போட்டு கொடுத்தனர், அதன் பின் தொடங்கியதே ஈழ யுத்தம்
இதனால்தான் ஈரான் போன்ற நாடுகள் இவர்களை அனுமதிப்பதே இல்லை,
ஆக உறுதியாக சொல்லலாம் மிஷினரிகளில் இன்று பெரும்பான்மை மோசடி ரகமே, இதில் எந்த கிறிஸ்தவன் என்றால் கூடுமானவரை அந்த பிரிவினை கோஷ்டி, அதற்கு கிறிஸ்தவமும் முழுக்க தெரியாது, நாட்டுபற்றும் தெரியாது, ஒரு செம்மறியாட்டு மந்தை அது
அவர்களை யாரோ எங்கிருந்தோ இயக்குகின்றார்கள், அந்த பிசாசுகள் செய்ய சொன்னதை எல்ல்லாம் இவர்கள் தட்டாமல் செய்கின்றார்கள்
இந்த மிஷினரிகளை எல்லாம் கண்காணிப்புக்குள் கொண்டுவரவேண்டும் என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க முடியாது, இருந்தால் அவன் இந்தியனாக இருக்க முடியாது.
இந்த மாபெரும் மனித அவலத்தை செய்திருப்பது கிறிஸ்தவனாக இருநதால் அவனை சிலுவையிலே அறைந்து கொல்லவேண்டும்
ஆனால் ஒரு விஷயம் உறுத்துகின்றது
இந்த சர்ச்சையில் ஒரு இந்து சாமியார் ஆசிரமம் சிக்கி இருந்தால் இந்நேரம் பொங்கி சாடி இருப்பார்கள், ஊடகம் முதல் பகுத்தறிவாளர், சிறுபான்மை பாதுகாவலர்கள், நடுநிலையாளர்கள் எல்லாம் வந்து குதிப்பார்கள்
ஆனால் கிறிஸ்தவ நிறுவணம் சிக்கி இருக்கும்பொழுது எந்த பத்திரிகையிலும் சத்தமில்லை, கவர் ஸ்டோரி இல்லை, டிவிகளில் பெரும் பரபரப்பு விவாதமில்லை, திடீர் துப்பறிவாளர் எல்லாம் கிளம்பவில்லை
ஏன் என்றால் அப்படித்தான், இங்கு சில விஷயங்களை புரிந்துகொள்ள முடியாது. கேட்டால் நீ ஒரு ஆர்.எஸ்.எஸ் என்பார்கள்
இப்படி கேட்டுவிட்டால் நாம் ஒரு ஆர்.எஸ்.எஸ் என்றால் சந்தோஷமாக ஆம் என ஒப்புகொள்ளலாம்