புஷ்பவனம் குப்புசாமி கோபசாமி ஆகிவிட்டார்
தமிழக இசையியல் மற்றும் கவின்கலை பலகலைகழகதுறை துணைவேந்தர் பதவி கைவிட்டு போனதிலிருந்து புஷ்பவனம் குப்புசாமி கோபசாமி ஆகிவிட்டார்.
தென்னகத்து சுடலைமாட சாமியாக ஆடிக்கொண்டிருப்பவரை கண்டால் கொஞ்சம் அச்சமாகவே இருக்கின்றது
அவரின் மனைவியோ மாரியம்மா என பக்தர்கள் ஆடுவது போல கடும் சீற்றம்
தம்பதி சகிதமாக இருவரும் ஆக்ரோஷ பேட்டி கொடுப்பதை பார்த்தால் விரைவில் கோவன் ஸ்டைலில் புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பாடலோடு கிளம்பினாலும் ஆச்சரியமில்லை.
“கோட்டையில இருக்குதொரு
நன்றி கெட்ட சாமி
அதனை போல துரோகி உண்டா
ஊருக்குள்ள காமி”
என பட்டையினை கிளப்பும் பாடலோடு அவர் வந்தால் அது தினகரன் தரப்பின் கொள்கை விளக்க பாடல் ஆகலாம்
புஷ்பவனத்தார் ஏமாற்றமாட்டார் என தமிழகம் நம்பிகொண்டிருக்கின்றது