என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக வரிசைகட்டி அடிக்கின்றார்கள்…
இதை விட்டால் நேரமில்லை என எல்லா டிவிக்காரர்களும் நினைத்தார்களோ என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக வரிசைகட்டி அடிக்கின்றார்கள், இதில் ஜெயா டிவி விதிவிலக்கு மூன்றாம் உலகப்போர் வந்தாலும் அங்கு ராமசந்திரனும் ஜெயாவும் ஆடிகொண்டிருப்பார்கள்
ஒரு டிவியில் 16 வயதினிலே ஓடுகின்றது. பாரதிராஜா செய்த நல்ல காரியங்களில் ஒன்று அக்கால கிராமங்களை படம்பிடித்து வைத்தது, காரை பெயர்ந்த வீடு, மாட்டுவண்டி, திண்ணை, சிம்னி விளக்கு, வாரசந்தை, கடவாய்பெட்டி சுமக்கும் கிழவி என 1980வரை ஆங்காங்கே இருந்த கிராம அடையாளங்களின் நினைவினை கிளறிவிட்டது படம்
இன்று எல்லா கிராமங்களும் மாறியாயிற்று, அக்கால கிராமங்கள் அவ்வளவு எளிமையாய் அழகாய் இருந்திருக்கின்றன, அவர்கள் வாழ்க்கையும் கூட எளிமையாய் இருந்திருக்கின்றன
இனி அக்காலங்கள் திரும்பாது , பழைய நினைவுகளை திரும்பி பார்த்துவிட்டு கண்களை துடைக்க வேண்டியதுதான்
இந்த படத்தில் மய்யல் கொள்ள வைக்கும் மயிலு, வய்யம் அதாவது வசவு நிறைந்த பேச்சு பேசும் காந்திமதி, டைரக்டர் சொன்னபடி நடித்தால் மய்ய நடிப்பில் பின்னும் கமலஹாசன் என ஆளாளுக்கு பின்னுகின்றார்கள்
இப்படத்தை கவனித்தால் இந்த படத்தில் வரும் அனைவரும் பின் உச்சம் தொட்டிருக்கின்றார்கள். ஸ்ரீதேவி, ரஜினி, கமல், கவுண்டமணி, இளையராஜா, பாரதிராஜா என எல்லோருமே பெரும் நட்சத்திரமாகி இருக்கின்றார்கள்
இந்த படத்தில் இருந்தும் காணாமல் போனது இருவர். ஒருவர் அந்த டாக்டர், இன்னொருவர் தயாரிப்பாளர்
படத்தின் நட்சத்திரங்களை விட , கதையினை விட அந்த கிராமமும் , அந்த பாத்திரங்களும் அக்காலத்திற்கும் அந்த சூழலுக்குமே இழுத்து செல்வதே படத்தின் பலம்
மாறிவிட்ட அந்த அக்கால எளிய கிராம வாழ்க்கையினை இம்மாதிரி படங்களில்தான் இனி தேடவேண்டும்.
நடிகை ஸ்ரீதேவி உண்மையில் ஒரு சிறந்த நடிகை
அதிலும் தமிழகத்தில் பிறந்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய சினிமா
நட்சத்திரமாக ஜொலித்தவர் …
அவரது மரணம் உண்மையில் சினிமா துறைக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு மாபெரும்
இழப்பு …
தமிழகத்தில் பிறந்து சினிமா துறையில் சாதனை படைத்த அந்த மிகச் சிறந்த நடிகை
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகிறோம்…
ஆனால் இந்த தமிழக ஊடகத் துறைகளும் பத்திரிகைத் துறையும் நேற்றிலிருந்து
இன்றுவரை ஸ்ரீதேவியின் மரணத்தைப் பற்றி மட்டும்
திரும்பும் பக்கமெல்லாம் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றனர்…
மக்களின் கவனத்தை அதன்மேல் திருப்பி விட்டிருக்கின்றனர்
விவசாயிகள் மீனவர்களின் மரணத்தை விட அதிகமாக மக்களைப் பேச வைத்து விட்டனர்
ஒரு நடிகையின் மரணத்தைப் பற்றி …
ஆனால் காவிரி பிரச்னை ஆகட்டும்..
தமிழக மீனவரின் பிரச்னையாகட்டும் விவசாயிகளின் பிரச்னையாகட்டும் ஏன் தமிழக
அரசியல் பிரச்னையாகட்டும் எத்தனையோ பிரச்னைகள் மீதான
நம் மக்களின் கவனத்தை அதன் மீது திருப்பாமல் சிதற விட்டுக் கொண்டிருக்கின்றன
…
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு ஊடகத் துறையின் பங்கு மிகப்பெரியது ஆனால்
இன்றைய ஊடக துறைகளோ விளம்பரத்தையும் வியாபாரத்தையும் மட்டும் நோக்கமாகக்
கொண்டு பல உண்மையை மக்களிடத்தில் இருந்து மறைக்கின்றனர் …
தங்களுக்கு சாதகமாக லாப நோக்கத்துடன் பல உண்மைகளை திரித்தும் மறைத்தும் மக்களை
ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்..
பல நல்ல தியாகிகளையும் தலைவர்களையும் தந்த ஊடகத்துறையும் பத்திரிக்கை துறையும்
இன்று தங்களது உண்மை முகத்தை மறந்து கொண்டிருக்கின்றன …
மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகமும் பத்திரிக்கையும் நிச்சயம் தொழில்
அல்ல அது ஒரு சேவை அது நமக்கு தேவை …
நம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல நல்ல தலைவர்கள் மட்டுமல்ல நல்ல ஊடக
துறையும் இன்றைய சூழ்நிலையில் நமக்கு அவசியமாகிறது அதை கருத்திற் கொண்டு தமிழக
ஊடகத் துறைகளும் பத்திரிகை துறைகளும் தங்களது கடமைகளை உணர்ந்து சிறப்பான
முறையில் செயலாற்ற வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர் …
*”அசோக் பாண்டியன் “*