மக்களே எல்லா தீர்ப்பும் அளிக்க நீதிமன்றம் எதற்கு?

ஆதார் அட்டை வந்ததினால் ரேஷன் கடை முதல் பல இடங்களில் போலி முகவரிகள் தடுக்கபட்டன, இதனால் அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் என்கின்றது செய்தி

இதனால்தான் சொன்னோம், ஆதார் அட்டைகள் நாட்டின் நிர்வாகத்திற்கும், திட்டமிடலுக்கும் மிக அவசியம் என்றோம்

இதோ நடந்திருக்கின்றது.

ஏதும் ஊழல், மோசடி என்றால் வரிந்துகட்டி வருபவர்கள், ஊடகத்தார் எல்லாம் மக்கள் பணம் சேமிக்கபட்டிருக்கும் இச்செய்தியினை சொல்லவே மாட்டார்கள்

இதுவே 17 ஆயிரம் கோடி ஊழல் என சொன்னால் பொங்கிகொண்டு வருவார்கள், அவர்கள் அப்படித்தான்

நல்ல விஷயங்கள் நடக்கும்போது வாழ்த்தாமல் இருக்க முடியாது, பல திட்டங்கள் சறுக்கினாலும் ஆதார் அதன் நோக்கத்தை அடைந்திருப்பது மாபெரும் வெற்றி.


ஜெ.படம் திறப்பு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும் : தலைமை நீதிபதி கருத்து

மக்கள் ஒழுங்காக தீர்பளித்தால் ஏன் ஜெயா மறுபடி வென்று ஆட்சிக்கு வரபோகின்றார்??

சரி மக்களே எல்லா தீர்ப்பும் அளிக்க நீதிமன்றம் எதற்கு? நீதிபதி எதற்க்கு? சட்டம் எதற்கு

ஒரு குற்றவாளியின் படம் திறக்கபட்டது சட்டபடி சரியா தவறா? என்றால் நீதிபதி என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார்

பூனைக்கு யார் மணி கட்டுவது?