திருப்பதியில் ராஜபக்சே !
என்னதான் மதம் மாறினாலும் அவன் அடிமனதில் தன் மூதாதையர் மதம் பற்றிய அச்சம் இருக்கும் என்பார்கள் , அது சிங்கள அரசியல்வாதிகள் விஷயத்தில் சரியாக இருக்கின்றது
பொதுவாக சிங்கள அரசியல்பீடத்தின் உச்சிக்கு வருபவர்கள் யாரென்றால் கிறிஸ்தவர்கள், காரணம் சிங்களரில் நன்கு படித்தவர்கள் அந்த கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்
ஆனால் சிங்கள சட்டபடி பவுத்த சிங்களனே அதிபராக முடியும் என்பதால் அவர்கள் மதம் மாறி ஆட்சியில் அமர்வார்கள்
தமிழகத்தில் கொள்கைமாறி பதவிக்கு வருவார்கள் அங்கே மதம்மாறி வருவார்கள் அவ்வளவுதான்
சாலமன் பண்டாரநாயக, ஜூலியஸ் ஜெயவர்த்தனே வரிசையில் அப்படி வந்தவர்தான் மகிந்தா ராஜபக்சே
இலங்கை சட்டப்படி பௌத்த சிங்களன் அதிபராகலாம் ஆனால் தனக்கு பிடித்த தெய்வங்களை தொழ அவருக்கு தடையே இல்லை
இதனால் அவர்கள் கதிர்காமம் செல்வார்கள் தய்யோ எனப்படும் காளிகோவிலுக்கு செல்வார்கள் (இது தாய், தாயே என்ற சொல்லிலிருந்து வந்தது என்கின்றார்கள்) அப்படியே பாண்டியர் காலம் தொட்டும் அவர்களுக்கு தொடர்பான தமிழக ஆலயங்களுக்கும் வருவார்கள்
காரணம் இந்த சிங்கள அதிபர் வரிசையினை எடுத்தால் எல்லாம் முதலி, செட்டி, நாயக்கர், சில இடங்களில் மறவா என தமிழ் வாரிசுகளாகவே இருக்கின்றது. நிச்சயம் அங்கு ஆள்வது தமிழ் வாரிசுகள்தான், உண்மை அதுதான். அதனால் மறக்காமல் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்புகின்றார்கள்
முன்பு மதுரை, பழனி, திருச்செந்தூர் என வந்துவிட்டு திருப்பதிக்கு செல்வார்கள், 1960க்கு பின் திருப்பதிக்கு மட்டும் வருவார்கள்
ஏன் வருகின்றார்கள்? வோட்டு வங்கியா என்றால் இல்லை மாறாக இப்பொழுது எந்த மதமாக இருந்தாலும் முன்னோர் வணங்கிய ஆலயங்களை வணங்கினால் அவர்களுக்கு மனதிருப்தி கிடைக்குமாம்
பின் ஏன் இந்துமதம் திரும்ப கூடாது என அவர்களிடம் கேட்க கூடாது, காரணம் கிறிஸ்தவம் கல்வி வழங்கியிருக்கின்றது, பவுத்தம் பதவி வழங்கி இருக்கின்றது
அதனால் இந்துமதமான அவர்கள் மூதாதையர் மதம் நிம்மதி மட்டும் கொடுத்தால் போதும் என்கின்றார்கள்
இந்து தெய்வங்களும் சாந்தமும் பொறுமையும் மிக்கவை. எந்த மதத்திற்கு சென்றாலும் தங்கள் பக்தர்களின் வாரிசுகள் வரும்பொழுது ஆசீர்வதித்தே அனுப்புகின்றன
அப்படி மகிந்த ராஜபக்சே திருப்பதி சாமியிடம் ஆசிவாங்க நாளை வருகின்றார்
கொஞ்சகாலமாக அவரை மறந்துவிட்ட வைகோ, சீமான் எல்லாம் நெட்டி முறித்து எழும்புகின்றார்கள்.
மகிந்தவிற்கு உலக அரங்கில் இருக்கும் மரியாதை கொஞ்சமல்ல. சிரிய அதிபர், ஈராக் அதிபர், பாகிஸ்தான் இந்திய பிரதமர்கள் என ஏராளமான நாடுகள் தீவிரவாதிகளை அழிக்க முடியாமல் தடுமாறும்பொழுது உலகின் மிக இறுக்கமான தீவிரவாத குழுவான புலிகளை ஒழித்து கட்டிய ஒரே அதிபர் என்ற பெருமை அவருக்கு உண்டு.
உலகம் அவரை அப்படித்தான் நோக்குகின்றது.
ஒருவேளை திருப்பதி சாமிதான் அந்த ஆசியினை வழங்கியிருக்குமோ? இல்லை கதிர்காம முருகனோ ஆனால் ஒரு தெய்வம் வழங்கி இருக்கின்றது
ஆக இனி திருப்பதி சாமி, கதிர்காம முருகன் எல்லாம் “தமிழின துரோகி” தெய்வங்களா என அங்கிள் சைமனிடம்தான் கேட்க வேண்டும்.