காவேரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போதைக்கு முடியாது என பேசியிருக்கின்றார் நிதின் கட்காரி அதுவும் சென்னையிலே பேசியிருக்கின்றார்
காவேரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்கபட வேண்டும் என்று சொல்லி கதவினை சாத்திகொண்டது உச்சநீதிமன்றம், இன்னும் 4 வாரங்களே மீதமிருக்கின்றன
இதில் இவர் இப்படி சொல்வது நீதிமன்ற அவமதிப்பன்றி வேறல்ல, ஒரு அமைச்சர் இப்படி சொல்வது அபத்தமான சட்ட மீறல்
காவேரி விவகாரத்தில் காங்கிரஸ் ஏமாற்றியது, எதற்காக என்றால் கன்னட வாக்கு வங்கியினை இழக்க அது விரும்பவில்லை, பாஜக அரசும் அதே சிந்தனையில் இருப்பது ஒன்றும் ரகசியமல்ல
இருவரும் வாக்கு சிந்தனையில் இருக்கட்டும் ஆனால் மதிக்க வேண்டிய உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காவிட்டால் எப்படி? பின் இந்நாட்டை ஆள என்ன தகுதி இவர்கள் இருவருக்கும் இருக்கின்றது?
கட்காரி நீதிமன்ற மாண்பில் கோடாரி வீசுகின்றார்
இதில் தமிழகமும் கன்னடமும் மத்திய அரசுக்கு இரு கண்கள் என்ற உருக்கம் வேறு, பின் ஏன் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் இன்னொரு கண்ணில் வெண்ணையும் என கேட்க யாருமில்லை
உங்கள் தீர்ப்புபடி காவேரி மேலாண்மை வாரியம அமைக்கபடவில்லை என உச்சநீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டிய தமிழக அரசு ஒரு சிலையினை வைத்து அது பண்டரிபாயா? காந்திமதியா? வடிவுக்கரசியா ? என தீவிர ஆய்வில் இருக்கின்றது
கட்காரியின் பேச்சு கண்டிக்கதக்கதும், அப்பட்டமான சட்ட மீறலும் ஆகும். ஒரு மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நீரின் அளவு குறைந்தபின்னும், அக்குறைந்த நீரையும் கொடுக்க யோசிப்போம் என்பது மகா அநியாயமும் அக்கிரமும் அசிங்கமான அரசியலுமாகும்.
வாக்கு வங்கிற்காக இத்தேசத்தின் நியாத்தை கொன்று புதைத்து, அதன் மேல் அநியாய கல்லறை கட்டி இவர்கள் செய்வது தமிழகத்திற்கான மாபெரும் கொடுமை. இது தமிழகத்தில் இருக்கும் சில தேசதுரோகிகளின் கருத்துக்கு கூடுதல் வலுசேர்க்கும்
இந்த காங்கிரசும், பாஜகவும் அதைத்தான் விரும்புகின்றது. தமிழர் எக்கேடு கெடட்டும் கன்னடம் வாழட்டும் என கருதினால் இத்தேசத்திற்கான ஒருமைபாட்டை இக்கட்சிகளே அழிக்க விளைகின்றன என்பதுதான் பொருள்
தமிழர் விரோதம் என இவர்கள் செய்வது தேசதுரோகம் , இத்தேசத்தின் ஒருமைபாட்டுக்கு எதிரான விரோதம்