காஞ்சி பீடத்தின் உச்ச குருவான சங்கராச்ச்சாரியார் மரணம்
இது துயர அதிர்ச்சி செய்திகள் வரும் வாரம் போலிருக்கின்றது, காஞ்சி பீடத்தின் உச்ச குருவான சங்கராச்ச்சாரியார் மரணம் அடைந்துவிட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன
இந்துக்களின் மிக புனிதமான , உயரமான பீடம் அது. அந்த பாரம்பரியமிக்க பீடத்தின் அதி உச்ச குருவாக இருந்து வழிநடத்தியவர் சங்கராச்சாரியார்.
அவர் மீது கொலை சர்ச்சைகளும் வந்தன. ஆனானபட்ட போப் ஆண்டவர் கூடத்தான் அக்காலத்தில் சிலுவை போரை ஆரம்பித்து ரத்த ஆறு புனிதமான ஜெருசலேமில் ஓட காரணமாயிருந்திருக்கின்றார், அவர் கொலையாளி என யாராவது சொன்னார்களா?
அயதுல்லா கோமேனி யார் தலைக்கு எல்லாமோ விலை வைத்தார், ஆனால் தலை கிடைக்கவில்லை
அப்படிபட்ட பல சர்ச்சைகள் கொண்ட உலகிது, அதனை விட்டுவிடலாம்.
உலகம் முழுக்க பக்தர்களை கொண்ட மடம் அது, அங்கு பிரபலமான எல்லா இந்திய அரசியல்வாதிகளும் , பிரபலங்களும் வந்து ஆசிபெறும் அளவிற்கு தனி சிறப்புடன் இருக்கின்றது, தனிபெரும் புகழுடையது அது.
அந்த மடத்திற்காக தன் வாழ்வினை அர்பணித்து, அங்கேயே வாழ்ந்து உழைத்து மறைந்த அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி. வல்ல இறைவன் அவருக்கு ஆத்ம சாந்தி அருளட்டும்
சங்கராச்சாரியாருக்கு நாம் தமிழர் கட்சி அஞ்சலி : சீமான்
கட்சி வைத்திருப்பதே யாருக்காவது அஞ்சலி செலுத்ததானே, இதில் என்ன ஆச்சரியம்?