மு.க ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, smiling, eating, sitting and indoor

நிச்சயம் கலைஞரின் அரசியல் வாரிசாக முரசொலி மாறனே அறியபட்டிருந்தார். அவருக்கு அடுத்து உருவாகி அல்லது உருவாக்கபட்டு வந்தவர் ஸ்டாலின்

ஸ்டாலினும் கட்சிக்கு பெரும் பணி ஆற்றியிருக்கின்றார், மிசா காலத்தில் அவர் சந்தித்த சோதனைகள் மிக கடுமையானவை அதனை எல்லாம் எந்த திமுகவினரும் மறுக்க முடியாது.

பல இடங்களில் அவரின் கட்சிப்பணி கோடி காட்டவேண்டிய விஷயம், பாராட்டுகுரிய விஷயம்

கலைஞரும், முரசொலி மாறனும் இல்லா நிலையில் திமுகவின் தலமையாக அவர் அறியபடுகின்றார்

நிச்சயம் கலைஞரின் எழுத்தாற்றலை, சாணக்கியதனத்தை அவரிடம் எதிர்பார்க்க முடியாது அல்லது கூடாது, ஸ்டாலிலும் அப்படியே இருக்க வேண்டிய அவசியமில்லை

ஆனால் திமுக எனும் கட்சி அண்ணாவிற்கு பின் எப்படி நிலைத்ததென்றால் அண்ணாவின் அணுகுமுறையும் கலைஞரின் அணுகுமுறையும் ஒன்றாகவே இருந்த காரணமே அன்றி வேறல்ல‌

கலைஞர் குடும அரசியல் என்பார்கள், ராமசந்திரனும் வைகோவும் முதுகில் குத்தும் வரை கலைஞர் குடும்பத்தாரை முன்னிநிறுத்தவில்லை. இதோ இந்த டி.ஆர் வரை அவரால் வளர்ந்து பின் முதுகில் குத்தியவர்கள்

இப்படி யாரையும் நம்பமுடியாமல் போன காரணத்தாலே குடும்பத்தாரை நிறுத்தினார், அதில் கூட மாறனின் மகன்கள் கொடுத்த கசப்புகள் உண்டு

எந்த கட்சியில் வாரிசு அரசியல் இல்லை? எல்லா கட்சியிலும் உண்டு

அது அல்ல விஷயம். திமுகவின் நீண்ட கால நிலைப்பிற்கு அண்ணா யாரையும் பகைக்காமல் கட்சி நடத்தியதும், கலைஞரும் வெட்ட வெண்டியவர்களை வெட்டி, அதே நேரம் சேர்க்க வேண்டியவர்களை சேர்த்து ஒருமாதிரி அரவணைத்து சென்றதிலே இக்கட்சி நின்றது

குறிப்பாக கூட்டணி அமைப்பது, கூட்டணி தலைவர்களை மதிப்பது. தொண்டர்களை நினைவில் நிறுத்தி பெயர் சொல்லி உற்சாகபடுத்துவது

ஸ்டாலின் இப்பொழுதுதான் வந்திருக்கின்றார்ம, முன்னாள் திமுக தலமைகளுக்குள்ள பண்போடு அவர் கட்சி நடத்தினால் சால சிறந்தது

கலைஞரை 1970களிலே குடியரசு தலைவர் பதவி வரை பலர் தூபம் போட்டு பார்த்தார்கள், “என் உயரம் எனக்கு தெரியும்யா, இந்த புகழ்ச்சிக்கெல்லாம் மயங்க மாட்டேன்” என மறுதலித்து தன் வழியே சென்றவர்

அரசியல் விஷயங்களுக்காக அவர் சில பாராட்டு கூட்டங்களுக்கு சென்றாரே அன்றி, துதிபாடிகள் முகஸ்துதி செய்பவர்கள் பற்றி மகா கவனமாகவே இருந்தார்

இந்த விஷயத்தில் ஸ்டாலின் சறுக்குவதாக தெரிகின்றது, பொதுவாக இலக்கியவாதிகள் அரசியலுக்கு சரிபட மாட்டார்கள், கலைஞரின் முகங்களில் இலக்கிய முகம் 10ம் முகமே தவிர முதல் முகம் அல்ல‌

ஆனால் இப்பொழுது ஸ்டாலின் அருகே இருக்கும் மனுஷ் போன்ற இம்சைகளின் ஒரே முகம் இம்சை இலக்கியவாதி முகம். இவர்கள் பாணர் பரம்பரை புகழ்பாடி பரிசில் பெற தெரியுமே தவிர யுத்த வியூக திறமையோ மதிநுட்ப மந்திரி ஆலோசனையோ கொஞ்சமும் இருக்காது

இம்மாதிரி இம்சைகளிடம் இருந்து ஸ்டாலின் ஒதுங்கி இருப்பது நல்லது

கலைஞர் காலம் போல் அல்ல, களங்கள் மாறிவிட்டன. தமிழகத்தில் ஏகபட்ட கட்சிகள் களத்தில் வந்தாயிற்று இன்னும் வரும்

இந்துத்வ அலை மிக பெரிதாக எழுகின்றது, திராவிட அரசியலை ஒழிப்பது என பல சக்திகள் கிளம்புகின்றன‌

இந்நிலையில் ஸ்டாலினின் அரசியல் பயணம் நிச்சயம் எளிதாயிருக்காது, கட்சி முதல் குடும்பம், கூட்டணி என பல சமரங்களிலும் சாமார்த்தியத்திலுமே அவர் கட்சி நடத்த இயலும்

கலைஞரின் மகன் என்பதை விட திமுகவின் தொண்டனாக இருந்து , போராட்டத்தில் கலந்து, சிறை எல்லாம் சென்று பெரும் அனுபவத்துடனே அவர் அந்த பொறுப்பிற்கு வந்தவர் என்பதால் இதெல்லாம் அவருக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை

அவரை தளபதி என சொல்வதில் உடன்பாடில்லை. ஏன் மழுப்பி மறைக்க வேண்டும், அவர் தலைவர் ஆனபின் அப்படி சொல்லிவிட்டு சென்றால்தான் என்ன?

ஆம், திமுகவின் தலைவர் சகல வளங்களும் , வாய்ப்பும் பெற்று தமிழகத்தை வாழவைக்க, நல்லாட்சி தர , மாநில உரிமைகாக்க பல்லாண்டு வாழ அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிலிப்பிற்கு பின்னால் அலெக்ஸாண்டர் பாய்ந்தது போல, செங்கிஸ்கானுக்கு பின் அவரின் மகன் பெரும் சாம்ராஜ்யம் அமைத்தது போல, ராசராச‌ சோழனுக்கு பின் ராஜேந்திர சோழன் பெரும் பாய்ச்சல் காட்டியது போல

நேருவிற்கு பின் இந்திரா அவர் கனவினை எல்லாம் நிறைவேற்றியது போல முக ஸ்டாலும் சாதிக்கட்டும் கலைஞரின் கனவெல்லாம் வெல்லட்டும்

அதில் தமிழகம் வாழட்டும்

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம்

தமிழகத்தின் தனிபெரும் கட்சி திமுக, எந்நாளும் இம்மாநில நலனை காக்கவும் நல்லாட்சி தரவும் அதனால் மட்டுமே முடியும், மாநிய சுயாட்சியில் தமிழகம் உரிமையுடன் வாழ அக்கட்சியால் மட்டுமே முடியும்

வேறு எந்த கட்சிக்கும் அப்படி அடித்தளமும் அனுபவமும் இல்லை . தமிழகத்தின் ஒரே நம்பிக்கை திமுக‌

அவ்வகையில் தேவர்மகனில் சிவாஜி சொல்வது போல “அய்யா உங்களத்தான நம்பணும், வேற யார் இருக்கா நம்புறதுக்கு” என்ற வசனத்தை தமிழகம் ஸ்டாலினிடமும் மனதுருகி கண்ணில் நீர்மல்க சொல்லி கொண்டிருக்கின்றது

தமிழகத்தின் இன்றைய மிகபெரும் ஒரே நம்பிக்கையும், ஆறுதலும், எதிர்பார்ப்பும் அவர்தான். அவர் ஒருவர்தான்

அந்த மு.க ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.