சென்னையிலும் நீர் பஞ்சம் வரலாம்… விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கலாம்….
உலகில் சில எச்சரிக்கைகள் ஒலிக்கதொடங்கிவிட்டது. அதாவது நகர விரிவாக்கம் ஏரிகள் ஆறுகளை விழுங்கி தள்ளியதன் விளைவாக, மழை என்றால் வெள்ளமும் கோடை என்றால் பெரும் வறட்சியும் ஏற்படுகின்றன
இப்பொழுது தென்னாப்ரிக்காவின் கேப் டவுன் நகரம் அந்த சவாலை சந்திக்கின்றது, அரசு கையினை பிசைகின்றது. விரைவில் பெரும் குடிநீர் தட்டுபாட்டினை அந்நகரம் சந்திக்கலாம் என பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது
முதலில் தூங்கிய அரசு வறட்சி ஏற்பட்டதும் விழித்தது, ஆனாலும் நிலமை எல்லை மீறி சென்றுகொண்டிருப்பதால் அரசு திகைக்கின்றது. நகரம் காலி செய்யபட்டாலும் ஆச்சரியமில்லை என்கின்றார்கள்
தென்னாப்ரிக்கா வெள்ளையாரல் உருவாக்கபட்ட நாடு, மிக சிறந்த நாடாக உருவாக்கி வைத்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பின் இந்தியா போல ஊழலும் இன்னபிற விஷயங்களும் நாட்டை நாசமாக்கிற்று
இவ்விஷயத்தினை பார்க்கும் எல்லா நகரங்களும் உஷாராகின்றன, மும்பையிலும் பல ஏரிகள், ஆறுகளை காணவில்லையாம். மக்களுக்கு விழிப்பு ஏற்பட மராட்டிய மாநில அரசு சார்பில் நதிகள் விழிப்புணர்வு பிரசார வீடியோ தயாரிக்கப்பட்டு உள்ளது. விழிப்புணர்வு சிக்கல் இல்லை மாறாக அதில் வந்திருக்கும் காட்சிதான் சிக்கல்
அந்த வீடியோவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அவர் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஜோடியாக பாடல் பாடி நளினமாக நடனமாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
பலர் கரித்துகொட்டி கலாய்க்கும் வேளையில் இது நமக்கு தெரியாமல் போயிற்றே என லாலுபிரசாத் போன்றவர்கள் வருத்ததிலும் உள்ளனர்
முதல்வர் மனைவியோடு நடனம் ஆடுவதா என பலத்த சர்ச்சை வருகின்றது
சென்னையிலும் நீர் பஞ்சம் வரலாம், அதனால் இங்கும் விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கலாம்
ஒருவேளை டெல்லி மகராஷ்டிரா பாணியில் வீடியோ தயாரித்து விழிப்புணர்வு ஊட்டுங்கள் என சொல்லிவிட்டால் தமிழக அரசு மீறவா முடியும்? இவர்களே மத்திய அரசோடு இணக்கம் என்ற பெயரில் அடிமைகள்
அதனால் பன்னீரும் பழனிச்சாமியும் ஆட வேண்டிய நிர்பந்தம் வந்தாலும் வரலாம். ஆனால் உறுதியாக சொல்லலாம் மோடி ஆணையிட்டால் இவர்கள் ஆடுவார்கள். (ஆணை என்ன மோடி முறைத்தாலே போதும்)
ஆடிவிட்டு ராமசந்திரனும் ஜெயாவும் ஆடாத ஆட்டமா? ஏற்படுத்தாத விழிப்புணர்வா? என சமாளிக்கவும் அவர்கள் கட்சி கொள்கை இடமளிக்கின்றது.
அதனால் எதுவும் நடக்கலாம். …ஸ்டார்ட் மியூசிக்