குஷ்புவிற்க்கு பிறகு நிக்கியா?

Image may contain: text

எந்த நடிகையினை பார்த்தாலும் இவர் குஷ்புவிற்கு அடுத்தவர் என எல்லோரிடமும் சொல்லி திரிவது அது. காரணம் அப்பொழுதுதான் நாயகி யாரென்று திரும்பி பார்ப்பார்களாம், என்ன படம் என நோக்குவார்களாம்

அப்படி சக்தி சிதம்பரம் என்ற காணாமல் போன இயக்குநர் ஒருவர் திரும்ப படம் எடுக்க வந்து, குஷ்புவிற்கு பின் ஸ்பெஷல் குவாலிட்டி உள்ள நடிகை நிக்கி கல்ராணி என்றாராம்

இதில் மனம் குளிர்ந்த நிக்கி சம்பளத்தை குறைத்தாரா என்பது தெரியவில்லை

இந்த சக்தி சிதம்பரம் என்பவரை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது, ஸ்பெஷல் குவாலிட்டி, ஸ்பெஷல் அழகு உள்ள ஒரே நடிகை குஷ்பு மட்டுமே

இன்றவளவும் அவர் அப்படியே இருப்பார், இன்னும் இருப்பார்

ஏதோ குஷ்புவிடம் எல்லாம் போயிற்று என்பது போலவும் அது நிக்கியிடம் வந்துவிட்டது போலவும் பேசிகொண்டிருக்கும் சக்தி சிதம்பரத்திற்கு வன்மையான கண்டனங்கள்

குஷ்பு ஒரு நதி, நிக்கியினை பார்த்து தொலைய வேண்டியது விதி. குஷ்பு ஒரு அன்னம் நிக்கி ஒரு பக்கி என அண்ணா, டி.ஆர் ஸ்டைலில் மிக தீவிரமாக கண்டிக்கின்றோம்

கம்பனும் சொல்லமுடியாத அழகில் ஜொலிக்கும் எங்கள் தங்க தலைவியின் புகழை காரச்சேவுக்கு கைகால் முளைத்து உருகி வழிந்த மெழுகு போல் இருக்கும் நிக்கி எனும் பக்கி நடிகையா தொடர்ச்சி?

இதனை ஏற்றுகொள்ள முடியாது. சக்தி சிதம்பரம் இன்னும் 24 மணி நேரத்தில் தன் வார்த்தைகளை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் சங்கத்தின் இன்னொரு முகத்தை அவர் காண நேரிடும்

கோடான கோடி குஷ்பு ரசிகர்கள் இன்னும் 24 மணிநேரம் மட்டுமே அமைதி காப்பார்கள்

அதன் பின் நடக்கும் விஷயங்களுக்கும், இவரின் அடுத்த படம் 0 பைசா வசூல் சாதனை படைக்க போகும் விஷயத்திற்கும் “சகதி” சிதம்பரமாக மாறி இருக்கும் இவரே பொறுப்பு

சக்தி சிதம்பரத்தின் படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியர் யாரென தெரியவில்லை ஆனால் தயாரிப்பாளர் நல்ல வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்தால் இப்பொழுதே சகலத்திற்கும் தயாராக இருப்பது மிக்க நல்லது