காலா டீஸர்….
அந்த டீசர் இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? இருக்க போவது என்னவென்றால் ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார், பன்ஞ் டயலாக் பேசுவார் அவ்வளவுதான்
தெருவில் நடப்பார், அங்கே சுருண்டு கிடக்கும் நாயினை மிதித்து “போ போய் போராடு” என்பார், மாடு கட்டபட்டிருந்தால் “மாட்டின் குணமே போராடுவது அதை கட்டிவைக்காதே” என வசனம் பேசி அவிழ்த்துவிடுவார்,
எவனாவது மும்பை கேட் பக்கம் புறாவுக்கு இரை போட்டால் “புறாவோட குணமே தேடி இரைபொறுக்குறது அத கெடுக்காதே” என சொல்லி அந்த திணையினை கடலுக்குள் வீசுவார்
கூடவே 4 பேர் நம்பர் சிஸ்டத்தில் அடிவாங்குவார்கள், ஆங்காங்கே அம்பேத்கர் படம் தென்படும், சே படம் இருக்கும் , ரஜினி சம்பந்தமே இல்லாமல் “யாருக்கு பொறந்தா என்னடா? சுகபிரசவமாதான் பொறந்தோம்” என வடிவேலுவிடம் சொல்லும் பைத்தியம் போல ஏதாவது சொல்லிகொண்டிருப்பார்
இந்த கருப்பு உடையினை ஏற்கனவே ” கொடி பறக்குது” படத்திலே பார்த்தாயிற்று, அன்றே சகிக்கவில்லை
கபாலியில் பல இமாலய தவறுகளை செய்திருந்தார் ரஞ்சித், அதாவது தோட்ட துண்டாடல் என்பது 1960ல் நடந்தது அது 1999ல் நடந்தது போல காட்டியிருந்தார்
இன்னொன்று அக்கால மலேய தமிழர்கள் வெள்ளை ஆடை அணிவார்கள் இல்லை கோட் சூட் அணிவார்கள், ரஜினி அணிந்தது போல ஒரு மாதிரி எல்லாம் அணியமாட்டார்கள்
இன்னும் ஏராள சொதப்பல்கள் உண்டு, அந்நேரம் ரஞ்சித் கையில் கிடைத்தால் மலேசியரில் பலர் அடித்திருக்கலாம் அன்னார் சிக்கவில்லை
இப்பொழுது பழைய பம்பாயின் கலாச்சாரத்தை சொல்கின்றேன் என சொதப்பி இருப்பார். பம்பாய்க்காரர்கள் போட்டு சாத்தபோகின்றார்கள்
டீசர் எவ்வளவு தாமதமாக வருகின்றதோ அவ்வளவுக்கு ரஞ்சித்துக்கும், ரஜினிக்கும் நல்லது
(இந்த வயதான ரஜினிக்கு இன்னும் இளமையாக இருக்கும் குஷ்புவினை ஜோடியாக நடிக்க வைத்திருந்தாலவது டீசருக்கு தமிழகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் அதனையும் செய்யவில்லை, இது என்று வந்தால் என்ன? வராமலே போனால்தான் என்ன?..)