அராபத் பற்றி ஒரு வார்த்தை சொல்வாரா , அங்கிள் ?

எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம்; சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

இப்பொழுது இந்திய தமிழனை யார் கொத்தாக அழித்தார்கள்?

அப்பொழுதே சொன்னோம் உலகெல்லாம் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் விசுவாசிகள் அந்தந்த நாட்டில் கொடிபிடிப்பார்கள் என்று.

பல நாட்டில் ஆரம்பித்தாயிற்று, இனி தமிழகத்திலும் தொடங்கும்

இதோ அங்கிள் வந்துவிட்டார் அல்லவா? பொறுத்து பாருங்கள் திருமுருகன் காந்தி, உதயகுமார் என வரிசையாக வருவார்கள்

வந்து ரஷ்யா தாக்குதலை நிறுத்தவேண்டும், அது காட்டுமிராண்டி நாடு என்றெல்லாம் வசனம் பேசுவார்கள்

பலரின் உண்மை முகம் தெரியும் , பல அந்நியநாட்டு கைகூலிகளை அடையாளம் காணும் நேரமிது, விட்டுவிடாதீர்கள்

(சிரியாவினை விட கொடுமையான நிலையில் இருப்பது பாலஸ்தீனம், அங்கிள் பாலஸ்தீனம் பற்றி பேசியிருப்பாரா? அங்கிள் என்றாவது பேசியிருப்பாரா?

அராபத் பற்றி ஒரு வார்த்தை சொல்வாரா?

ஆனால் சிரியா என்றவுடன் குதித்து வருகின்றாரே ஏன்?…)