வட கிழக்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகள்
வடகிழக்கு மாநிலங்களுக்கு எப்பொழுதுமே இந்திய அரசு தங்களை அந்நியபடுத்துகின்றது எனும் வருத்தமும் கோபமும் உண்டு
இந்தியாவின் வலதுகை விரல் போல தொங்கிகொண்டிருக்கும் மாநிலங்கள் அவை. இதுகாலம் ஆண்ட அரசுகளால் தங்களுக்கு முன்னேற்றமில்லை என சொல்லிகொண்டிருப்பவை
அதில் உண்மையும் இல்லாமல் இல்லை
பாஜகவினை திரிபுரா இம்முறை பாஜக பக்கம் சரிந்திருகின்றது, உலகிலிருந்தே கம்யூனிசம் விடைபெறும் வேளையில் , திரிபுராவிலிருந்தும் அது விடைபெறுவது பெரிய விஷயம் அல்ல
எம்மை பொறுத்தவரை இத்தேர்தல் முடிவு சொல்வது ஒன்றுதான்
தேசிய கட்சிகளிடமிருந்து இன்னொரு தேசிய கட்சி ஆட்சியினை பறிந்த்திருக்கின்றது, அம்மாநில மக்கள் இந்தியர்களாகவே மனதார வாழ்கின்றார்கள் என்பது புரிகின்றது
அந்நிய சக்திகள் பல்வேறு வகையில் புகுந்து அவர்கள் மனதை மாற்ற முயன்றாலும் அவை படுதோல்வி அடைந்திருக்கின்றன என்பது மகிழ்வான விஷயம்
இது நிச்சயம் மாற்றத்தை வேண்டி அம்மக்கள் கொடுத்திருக்கும் தீர்ப்பே தவிர வேறு ஒன்றும் அல்ல
இதில் வாக்கு மெஷினில் தில்லு முல்லு, மோடி தில்லுமுல்லு என்பதெல்லாம் சிரியாவில் தமிழன் விமானம் பறந்து மக்களை மீட்ட கதைதான்
பாஜக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால எந்த காரணத்திற்காக முன்பு இருந்த அரசுகளை அம்மக்கள் தூக்கி எறிந்தார்களோ அதனை கண்டறிந்து அக்குறைகளை உடனே நிவிர்த்தி செய்ய வேண்டியது பாஜகவின் கடமை
ராமன் ஆண்டால் என்ன, பரதன் ஆண்டால் என்ன? அயோத்தி நன்றாய் இருக்க வேண்டும் என்றொரு பழமொழி உண்டு
அப்படி எந்த தேசிய கட்சி ஆண்டால் என்ன? அம்மக்கள் 70 வருடமாக கேட்கும் நியாமான உரிமைகளை பெற்று நலமாய் வாழட்டும்